• May 02 2024

பிழையான தகவலை ஜோடிக்க முற்படுகிறதா பொலிஸ்? - கனடாவில் 6 பேர் கொலைச் சம்பவத்தில் முக்கிய திருப்பம்!

Tharun / Mar 14th 2024, 6:57 pm
image

Advertisement

கனடாவில் இடம்பெற்றுள்ள கொலை சம்பவம் தொடர்பில் படுகொலை செய்த, வேட்டையாடும் கத்திக்கு ஒத்த கத்தியையே சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்தியுள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  கடந்த புதன்கிழமை இரவு அந்த  பகுதியில் இலங்கையை சேர்ந்த தாயும், அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கையரும் கொல்லப்பட்டதுடன் பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார் 

அத்துடன் ஆறு பேரையும் கொலை செய்த  சந்தேகநபர் ஒரு கத்தியினை பயன்படுத்தினாரா? அல்லது பல கத்திகள் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த  விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

குறித்த படுகொலைச் சம்பவத்தின் சந்தேக நபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா எதிர்வரும் வியாழக்கிழமை(21) ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

இதே வேளை ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒட்டாவா காவல்துறையினர் பல தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், படுகொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா எதிர்வரும் வியாழக்கிழமை ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.

அத்துடன் அந்த கொலை சம்பவம் தொடர்பான  விசாரணையில் ஒட்டாவா காவல்துறையினர் பல தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை துப்பாக்கிச்சூடு என்று ஒட்டாவா காவல்துறையினர் முதலில் தவறாக தகவல் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை ஊடக சந்திப்பின் போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய சந்தேகநபரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் இறந்தவர்களின் பெயர்ப்  பட்டியலை மூன்று முறை சரி செய்து, மூன்றாவது மின்னஞ்சல் செய்தியில் இருந்து இறுதி பெயர் பட்டியல் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட ஒட்டாவா காவல்துறை, கொலை விசாரணைகள் மிகவும் சிக்கலானது என்றும், அவ்வப்போது தகவல்கள் மாறுவதாக கூறியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிழையான தகவலை ஜோடிக்க முற்படுகிறதா பொலிஸ் - கனடாவில் 6 பேர் கொலைச் சம்பவத்தில் முக்கிய திருப்பம் கனடாவில் இடம்பெற்றுள்ள கொலை சம்பவம் தொடர்பில் படுகொலை செய்த, வேட்டையாடும் கத்திக்கு ஒத்த கத்தியையே சந்தேகநபர் கொலைக்கு பயன்படுத்தியுள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  கடந்த புதன்கிழமை இரவு அந்த  பகுதியில் இலங்கையை சேர்ந்த தாயும், அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கையரும் கொல்லப்பட்டதுடன் பெண்ணின் கணவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார் அத்துடன் ஆறு பேரையும் கொலை செய்த  சந்தேகநபர் ஒரு கத்தியினை பயன்படுத்தினாரா அல்லது பல கத்திகள் படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த  விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, குறித்த படுகொலைச் சம்பவத்தின் சந்தேக நபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா எதிர்வரும் வியாழக்கிழமை(21) ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.இதே வேளை ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஒட்டாவா காவல்துறையினர் பல தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், படுகொலைச் சம்பவத்தின் சந்தேகநபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா எதிர்வரும் வியாழக்கிழமை ஒட்டாவா நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.அத்துடன் அந்த கொலை சம்பவம் தொடர்பான  விசாரணையில் ஒட்டாவா காவல்துறையினர் பல தவறான தகவல்களை வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.இந்நிலையில், இந்த சம்பவத்தை துப்பாக்கிச்சூடு என்று ஒட்டாவா காவல்துறையினர் முதலில் தவறாக தகவல் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும், காவல்துறை ஊடக சந்திப்பின் போது சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 19 வயதுடைய சந்தேகநபரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.அத்துடன் இறந்தவர்களின் பெயர்ப்  பட்டியலை மூன்று முறை சரி செய்து, மூன்றாவது மின்னஞ்சல் செய்தியில் இருந்து இறுதி பெயர் பட்டியல் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.இந்த தவறுகளை ஒப்புக்கொண்ட ஒட்டாவா காவல்துறை, கொலை விசாரணைகள் மிகவும் சிக்கலானது என்றும், அவ்வப்போது தகவல்கள் மாறுவதாக கூறியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement