• Jun 17 2025

அரச மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையா? பிரதி சுகாதார அமைச்சர் விளக்கம்..!

Sharmi / Jun 16th 2025, 9:06 am
image

நாட்டிலுள்ள அரச மருத்துவமனைகளில் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மருந்து பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே பிரதி சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

'உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் இடையூறு இல்லாமல் கிடைக்கின்றன. 

இருப்பினும், சில மருந்துகள் தொடர்ச்சியான விநியோகச் சங்கிலி சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த இடையூறுகள் புதியவை அல்ல, அவை பல ஆண்டுகளாக உள்ளன.

2026 ஆம் ஆண்டுக்குள் இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க தற்போது விரிவான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் நிலவும் அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை தொடர்பில் அரசாங்கம் அவசரமாக தலையிட வேண்டும் எனவும் மனித உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமை என்பதை வலியுறுத்தி, அனைத்து பொறுப்புள்ள அதிகாரிகளும் தாமதமின்றி செயல்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சில தினங்களுக்கு முன்னர் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அரச மருத்துவமனைகளில் மருந்து பற்றாக்குறையா பிரதி சுகாதார அமைச்சர் விளக்கம். நாட்டிலுள்ள அரச மருத்துவமனைகளில் பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது மருந்து பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளியான நிலையில் அதற்கு பதிலளிக்கும் போதே பிரதி சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,'உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கான அத்தியாவசிய மருந்துகள் இடையூறு இல்லாமல் கிடைக்கின்றன. இருப்பினும், சில மருந்துகள் தொடர்ச்சியான விநியோகச் சங்கிலி சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த இடையூறுகள் புதியவை அல்ல, அவை பல ஆண்டுகளாக உள்ளன.2026 ஆம் ஆண்டுக்குள் இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்க்க தற்போது விரிவான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.இதேவேளை நாட்டில் நிலவும் அத்தியாவசிய மருந்துகளின் கடுமையான பற்றாக்குறை தொடர்பில் அரசாங்கம் அவசரமாக தலையிட வேண்டும் எனவும் மனித உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமை என்பதை வலியுறுத்தி, அனைத்து பொறுப்புள்ள அதிகாரிகளும் தாமதமின்றி செயல்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சில தினங்களுக்கு முன்னர் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement