கர்நாடகாவின் மடியா பகுதியில், மசூதி அருகே பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த பின்னர், அவரது வீட்டில் பெருமளவு பணம் கண்டெடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பல ஆண்டுகளாக பிச்சை மூலம் கிடைத்த பணத்தை அவர் சிறிது சிறிதாக சேமித்து வந்ததாக கூறப்படுகிறது.
மூதாட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மசூதிக் குழுவினர் அவரது வீட்டைச் சுத்தம் செய்யச் செய்துள்ளனர்.
அப்போது வீட்டின் பல்வேறு பகுதிகளில் பணத்தால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படும் பல சாக்குப்பைகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கண்டெடுக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு ₹1 கோடியைத் தாண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், பணம் முழுமையாக எண்ணி முடிக்கப்படாத நிலையில், சரியான தொகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அந்த மூதாட்டிக்கு கணவரோ குழந்தைகளோ இல்லை என்று கூறப்படுகிறது.
அவரது சகோதரர்களை மசூதிக் குழுவினர் தொடர்புகொண்டபோது, அந்தப் பணத்தில் தங்களுக்கு உரிமை இல்லை என்றும், அதை மசூதிக்கு நன்கொடையாக வழங்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தச் சம்பவம் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பதற்குக் காரணம், அந்தப் பெண் வறுமையான வாழ்க்கை வாழ்ந்து, பிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுவதுதான்.
அப்படியிருக்க, பல ஆண்டுகளில் இவ்வளவு பெரிய தொகையை அவர் எவ்வாறு சேமித்தார்?
யாரிடமிருந்தெல்லாம் பணம் பெற்றார்?
எவ்வளவு காலமாக அதைச் சேமித்து வந்தார்?
பணத்தின் உண்மையான மதிப்பு எவ்வளவு?
என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.
எனினும், ₹1 கோடிக்கும் அதிகமான தொகை என்ற தகவல் தற்போது முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், பணம் எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகிய பின்னரே உண்மையான தொகை தெரியவரும்.
பிச்சை எடுத்த மூதாட்டி வீட்டில் கோடிக்கணக்கில் பணமா கர்நாடகாவின் மடியா பகுதியில், மசூதி அருகே பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த பின்னர், அவரது வீட்டில் பெருமளவு பணம் கண்டெடுக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.பல ஆண்டுகளாக பிச்சை மூலம் கிடைத்த பணத்தை அவர் சிறிது சிறிதாக சேமித்து வந்ததாக கூறப்படுகிறது.மூதாட்டி உயிரிழந்ததைத் தொடர்ந்து, மசூதிக் குழுவினர் அவரது வீட்டைச் சுத்தம் செய்யச் செய்துள்ளனர்.அப்போது வீட்டின் பல்வேறு பகுதிகளில் பணத்தால் நிரப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படும் பல சாக்குப்பைகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கண்டெடுக்கப்பட்ட பணத்தின் மொத்த மதிப்பு ₹1 கோடியைத் தாண்டியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், பணம் முழுமையாக எண்ணி முடிக்கப்படாத நிலையில், சரியான தொகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.அந்த மூதாட்டிக்கு கணவரோ குழந்தைகளோ இல்லை என்று கூறப்படுகிறது.அவரது சகோதரர்களை மசூதிக் குழுவினர் தொடர்புகொண்டபோது, அந்தப் பணத்தில் தங்களுக்கு உரிமை இல்லை என்றும், அதை மசூதிக்கு நன்கொடையாக வழங்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.இந்தச் சம்பவம் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பதற்குக் காரணம், அந்தப் பெண் வறுமையான வாழ்க்கை வாழ்ந்து, பிச்சை எடுத்து வந்ததாகக் கூறப்படுவதுதான்.அப்படியிருக்க, பல ஆண்டுகளில் இவ்வளவு பெரிய தொகையை அவர் எவ்வாறு சேமித்தார்யாரிடமிருந்தெல்லாம் பணம் பெற்றார்எவ்வளவு காலமாக அதைச் சேமித்து வந்தார்பணத்தின் உண்மையான மதிப்பு எவ்வளவுஎன்பது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளன.எனினும், ₹1 கோடிக்கும் அதிகமான தொகை என்ற தகவல் தற்போது முழுமையாக உறுதிப்படுத்தப்படாத நிலையில், பணம் எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகிய பின்னரே உண்மையான தொகை தெரியவரும்.