• Sep 09 2025

ரணில் பாராளுமன்றத்தில் இருந்தால் நாட்டுக்கு நல்லது – ருவான் விஜேவர்த்தன கருத்து

Chithra / Sep 8th 2025, 8:04 am
image

நாட்டின் தற்போதைய நிலையில் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டுக்கு நல்லது. என்றாலும்  அவர் பாராளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.

பெளர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று சிறிகொத்தவில் இடம்பெற்ற தானசாலை நிகழ்வை ஆரம்பித்து வைத்து, அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இ்வ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தற்போதைய நிலைமையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருந்தால் நாட்டுக்கு நல்லது என்றே நான் நினைக்கிறேன். 

அவர் பாராளுமன்றத்துக்கு செல்வதாக இருந்தால், சரியான நேரம் காலம் பார்த்து செல்வார். என்றாலும் இதுதொடர்பில் எந்த கலந்துரையாடலும் தற்போதையக்கு இடம்பெறவில்லை.

அதேநேரம் கூட்டு எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்று வருகின்றன.  அந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. 

ஐக்கிய தேசிய கட்சியும் அதில் கலந்துகொண்டு, கூட்டாக செயற்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். 

எதிர்க்கட்சியில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் காலங்களில் கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைத்துக்கொள்ள முடியுமாகும் என நம்புகிறோம்.என்றார்.

ரணில் பாராளுமன்றத்தில் இருந்தால் நாட்டுக்கு நல்லது – ருவான் விஜேவர்த்தன கருத்து நாட்டின் தற்போதைய நிலையில் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருந்தால் அது நாட்டுக்கு நல்லது. என்றாலும்  அவர் பாராளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்தார்.பெளர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று சிறிகொத்தவில் இடம்பெற்ற தானசாலை நிகழ்வை ஆரம்பித்து வைத்து, அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இ்வ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,நாட்டின் தற்போதைய நிலைமையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருந்தால் நாட்டுக்கு நல்லது என்றே நான் நினைக்கிறேன். அவர் பாராளுமன்றத்துக்கு செல்வதாக இருந்தால், சரியான நேரம் காலம் பார்த்து செல்வார். என்றாலும் இதுதொடர்பில் எந்த கலந்துரையாடலும் தற்போதையக்கு இடம்பெறவில்லை.அதேநேரம் கூட்டு எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இடம்பெற்று வருகின்றன.  அந்த நடவடிக்கைகள் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சியும் அதில் கலந்துகொண்டு, கூட்டாக செயற்படுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். எதிர்க்கட்சியில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்வரும் காலங்களில் கூட்டு எதிர்க்கட்சி ஒன்றை அமைத்துக்கொள்ள முடியுமாகும் என நம்புகிறோம்.என்றார்.

Advertisement

Advertisement

Advertisement