• Apr 02 2025

யாழ் சுன்னாகம் தனியார் நிறுவன மின் இணைப்பு விவகாரம்; சட்ட ரீதியாகவே முன்னெடுப்பு- மின்சார சபை தெரிவிப்பு...!

Sharmi / Dec 16th 2024, 6:58 pm
image

யாழ் சுன்னாகம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படவுள்ள உயர் மின்னழுத்த மின்சாரம், இலங்கை மின்சார சபை சட்ட விதிகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி தெரிவித்தார். 

யார் மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது குறித்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனாவின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த தனியார் நிறுவனம் தமது தொழில் துறை ஒன்றை ஆரம்பிப்பதற்கு உயர் மின்னழுத்த மின்சாரத்தை பெறுவதற்காக இலங்கை மின்சார சபையிடம் விண்ணப்பித்தது. 

அதன் பிரகாரம் அப்போது மக்களின் 80 வீதமானவர்களின் கையெழுத்துடன் உரிய ஆவணங்களை உரிய ஆவணங்களை பரிசோதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் சில நபர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மின் இணைப்பை வழங்குவதற்கு இடையூறு விளைவிக்கிறார்கள் என்றார்.

இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர், குறித்த நிறுவனத்திற்கு மின் சாரம் வழங்கும் கம்பங்கள்  குறித்த பகுதியின் பிரதேச சபையின் அனுமதியில்லாமல் மின்கம்பங்களை நாட்டியுள்ளனர் என்றார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த மின்சார சபை உயர் அதிகாரி,  மின்சார சபை 2009 31A பிரிவு பிரதேச சபையின் அனுமதியை தாண்டி பொது வீதியில் மின் இணைப்பை வழங்க முடியும் அது பற்றிய பிரதேச சபையின் அனுமதி தேவையில்லை.

வேண்டுமானால் எமது மின் இணைப்பு விவகாரத்தை சட்டரீதியாக யாரும் சவாலுக்கு உட்படுத்தப்பட முடியும் என்றார்.

இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடி இரண்டு கிழமைக்குள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவுக்கு அறிக்கை  சமர்ப்பிக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

குறித்த நிறுவனத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கு அப் பகுதியில் சிலர் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ் சுன்னாகம் தனியார் நிறுவன மின் இணைப்பு விவகாரம்; சட்ட ரீதியாகவே முன்னெடுப்பு- மின்சார சபை தெரிவிப்பு. யாழ் சுன்னாகம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படவுள்ள உயர் மின்னழுத்த மின்சாரம், இலங்கை மின்சார சபை சட்ட விதிகளுக்கு அமைவாகவே மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி தெரிவித்தார். யார் மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது குறித்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனாவின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,குறித்த தனியார் நிறுவனம் தமது தொழில் துறை ஒன்றை ஆரம்பிப்பதற்கு உயர் மின்னழுத்த மின்சாரத்தை பெறுவதற்காக இலங்கை மின்சார சபையிடம் விண்ணப்பித்தது. அதன் பிரகாரம் அப்போது மக்களின் 80 வீதமானவர்களின் கையெழுத்துடன் உரிய ஆவணங்களை உரிய ஆவணங்களை பரிசோதித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சில நபர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மின் இணைப்பை வழங்குவதற்கு இடையூறு விளைவிக்கிறார்கள் என்றார்.இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர், குறித்த நிறுவனத்திற்கு மின் சாரம் வழங்கும் கம்பங்கள்  குறித்த பகுதியின் பிரதேச சபையின் அனுமதியில்லாமல் மின்கம்பங்களை நாட்டியுள்ளனர் என்றார்.இதன் போது கருத்துத் தெரிவித்த மின்சார சபை உயர் அதிகாரி,  மின்சார சபை 2009 31A பிரிவு பிரதேச சபையின் அனுமதியை தாண்டி பொது வீதியில் மின் இணைப்பை வழங்க முடியும் அது பற்றிய பிரதேச சபையின் அனுமதி தேவையில்லை.வேண்டுமானால் எமது மின் இணைப்பு விவகாரத்தை சட்டரீதியாக யாரும் சவாலுக்கு உட்படுத்தப்பட முடியும் என்றார்.இந்நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்துரையாடி இரண்டு கிழமைக்குள் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவுக்கு அறிக்கை  சமர்ப்பிக்க வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.குறித்த நிறுவனத்திற்கு மின்சாரத்தை வழங்குவதற்கு அப் பகுதியில் சிலர் போராட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement