• Jul 05 2024

கவர்ச்சிகரமான சுற்றுலா கடற்கரை வலயங்கள் பட்டியலில் யாழ் கசூரினா கடற்கரை...!

Sharmi / Jul 3rd 2024, 11:42 am
image

Advertisement

இந்த ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும். 26 கரையோர வலயங்களின் அபிவிருத்திக்கான அடிப்படை வடிவமைப்புகள் மற்றும் கட்டமைப்புத் திட்டங்கள் இந்த நாட்களில் தயாரிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துகின்றன.

வனாத்தவில்லு ஆற்றின் வாடி, வனாத்தவில்லு களப்பு தீவு, கல்பிட்டி குடா , கல்பிட்டி வைகால, நீர்கொழும்பு தடாகம், நீர்கொழும்பு கபுங்கொட, வத்தளை பிரிதிபுர, பெந்தோட்ட கடற்கரை, ஹபராதுவ கொக்கல லகூன், திக்வெல்ல சீதாகால்ல, தங்கல்ல ரெகவ லகூன், அம்பலாங்கொடை லூனம் லகூன், ஹம்பாந்தோட்டை மலல லேயாவ, திஸ்ஸமஹாராம கிரிந்த வெலி மலை லாஹுகல குனுக்கல கடற்கரை, பொத்துவில் எலிபெண்ட் ரொக், மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு சல்லதீவு, கிண்ணியா தம்பலகமுவ குடா, திருகோணமலை ஆளுநரின் அலுவலகப் பகுதி, திருகோணமலை உப்புவெளி, திருகோணமலை சம்பல் தீவு, குச்சிவெளி அரிசிமலை முல்லைத்தீவு நாயாறு குடா, முல்லைத்தீவு நந்திக்கடல் குடா, யாழ்ப்பாணம் சென்னக்குளம் கடற்கரை,  யாழ்ப்பாணம்  கசூரினா கடற்கரைஆகிய கரையோரப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வருடம் இரணைவில, உப்பாறு, கீரிமுண்டலம், மூதூர், காரைதீவு, நிந்தவூர், புஸ்ஸ, தல்தியவத்தை, கொக்கல, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காத்தான்குடி, உஸ்வெட்டகெய்யாவ ஆகிய கரையோரங்களில் 14 அவசரகால கரையோர பாதுகாப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அபிவிருத்திப் பணிகளுக்காக 520 மின் அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வருடம் 30 கடற்கரை துப்புரவு வேலைத்திட்டங்களும் 04  சதுப்புநிலத் தாவரங்கள் நடுகை வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை 300 மில்லியன் ரூபா.

இந்த ஆண்டில், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் 11 கடலோரப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. களுத்துறை கலிடோ, லுனாவ, வடக்கு உடப்பு, நிந்தவூர், சாய்ந்தமருது, மூதூர், மெடிஹ, முதுகடுவ, கங்கவ, இரணைவில மற்றும் பண்டாரமுல்ல ஆகிய பிரதேசங்களில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும், கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டத்தின்படி, கடலோர வலயத் திட்டம் திருத்தப்பட்டு தேவையான இடைவெளியில் புதுப்பிக்கப்பட வேண்டும். அதன்படி, 2024-2029 ஆம் ஆண்டுக்கான கரையோர வலய முகாமைத்துவத் திட்டத்தின் திருத்தம் தற்போது நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்  7 கடலோரப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. மொரட்டுவை, களுத்துறை, கலிடோ, அம்பலாங்கொடை, பொருதொட்டை, சாய்ந்துமருது, நிந்தவூர் மற்றும் திருக்கோவில் ஆகியவை அந்த கடற்கரைகளாகும். அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 388.35 மில்லியன் ரூபா. 2023 ஆம் ஆண்டில் 102 கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டங்கள் மற்றும் 25 சதுப்பு நிலத் தாவரங்கள் நடும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இரணைவில, உப்பாறு, கீரிமுண்டலம், மூதூர், காரைதீவு, நிந்தவூர், புஸ்ஸ, தல்தியாவத்தை, கொக்கல, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காத்தான்குடி, உஸ்வெட்டகெய்யாவ மற்றும் மருதமுனை ஆகிய கடற்கரைகளில் 20 அவசரகால பாதுகாப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சுமார் 342 மீட்டர் பயனுள்ள கடற்கரை பாதுகாக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

கவர்ச்சிகரமான சுற்றுலா கடற்கரை வலயங்கள் பட்டியலில் யாழ் கசூரினா கடற்கரை. இந்த ஆண்டில் அடையாளம் காணப்பட்ட 26 சுற்றுலா கவர்ச்சிகரமான கடற்கரை வலயங்கள் உருவாக்கப்படும். 26 கரையோர வலயங்களின் அபிவிருத்திக்கான அடிப்படை வடிவமைப்புகள் மற்றும் கட்டமைப்புத் திட்டங்கள் இந்த நாட்களில் தயாரிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் இணைந்து இதனை நடைமுறைப்படுத்துகின்றன.வனாத்தவில்லு ஆற்றின் வாடி, வனாத்தவில்லு களப்பு தீவு, கல்பிட்டி குடா , கல்பிட்டி வைகால, நீர்கொழும்பு தடாகம், நீர்கொழும்பு கபுங்கொட, வத்தளை பிரிதிபுர, பெந்தோட்ட கடற்கரை, ஹபராதுவ கொக்கல லகூன், திக்வெல்ல சீதாகால்ல, தங்கல்ல ரெகவ லகூன், அம்பலாங்கொடை லூனம் லகூன், ஹம்பாந்தோட்டை மலல லேயாவ, திஸ்ஸமஹாராம கிரிந்த வெலி மலை லாஹுகல குனுக்கல கடற்கரை, பொத்துவில் எலிபெண்ட் ரொக், மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு சல்லதீவு, கிண்ணியா தம்பலகமுவ குடா, திருகோணமலை ஆளுநரின் அலுவலகப் பகுதி, திருகோணமலை உப்புவெளி, திருகோணமலை சம்பல் தீவு, குச்சிவெளி அரிசிமலை முல்லைத்தீவு நாயாறு குடா, முல்லைத்தீவு நந்திக்கடல் குடா, யாழ்ப்பாணம் சென்னக்குளம் கடற்கரை,  யாழ்ப்பாணம்  கசூரினா கடற்கரைஆகிய கரையோரப் பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.கடலோர சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் தனியார் துறையுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வருடம் இரணைவில, உப்பாறு, கீரிமுண்டலம், மூதூர், காரைதீவு, நிந்தவூர், புஸ்ஸ, தல்தியவத்தை, கொக்கல, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காத்தான்குடி, உஸ்வெட்டகெய்யாவ ஆகிய கரையோரங்களில் 14 அவசரகால கரையோர பாதுகாப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அபிவிருத்திப் பணிகளுக்காக 520 மின் அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வருடம் 30 கடற்கரை துப்புரவு வேலைத்திட்டங்களும் 04  சதுப்புநிலத் தாவரங்கள் நடுகை வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக செலவிடப்பட்ட தொகை 300 மில்லியன் ரூபா.இந்த ஆண்டில், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் 11 கடலோரப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. களுத்துறை கலிடோ, லுனாவ, வடக்கு உடப்பு, நிந்தவூர், சாய்ந்தமருது, மூதூர், மெடிஹ, முதுகடுவ, கங்கவ, இரணைவில மற்றும் பண்டாரமுல்ல ஆகிய பிரதேசங்களில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.மேலும், கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வள முகாமைத்துவச் சட்டத்தின்படி, கடலோர வலயத் திட்டம் திருத்தப்பட்டு தேவையான இடைவெளியில் புதுப்பிக்கப்பட வேண்டும். அதன்படி, 2024-2029 ஆம் ஆண்டுக்கான கரையோர வலய முகாமைத்துவத் திட்டத்தின் திருத்தம் தற்போது நிறைவடைந்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.கடந்த ஆண்டு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம்  7 கடலோரப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. மொரட்டுவை, களுத்துறை, கலிடோ, அம்பலாங்கொடை, பொருதொட்டை, சாய்ந்துமருது, நிந்தவூர் மற்றும் திருக்கோவில் ஆகியவை அந்த கடற்கரைகளாகும். அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை 388.35 மில்லியன் ரூபா. 2023 ஆம் ஆண்டில் 102 கடற்கரை சுத்தப்படுத்தும் திட்டங்கள் மற்றும் 25 சதுப்பு நிலத் தாவரங்கள் நடும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த வருடம் இரணைவில, உப்பாறு, கீரிமுண்டலம், மூதூர், காரைதீவு, நிந்தவூர், புஸ்ஸ, தல்தியாவத்தை, கொக்கல, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காத்தான்குடி, உஸ்வெட்டகெய்யாவ மற்றும் மருதமுனை ஆகிய கடற்கரைகளில் 20 அவசரகால பாதுகாப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சுமார் 342 மீட்டர் பயனுள்ள கடற்கரை பாதுகாக்கப்பட்டுள்ளதாக கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement