• Sep 08 2024

ஜனாதிபதியின் வலையில் சிக்கிய கயேந்திரர்கள் - அபிவிருத்திக்கு 6 கோடி நிதி கிடைத்தது.

Anaath / Jul 21st 2024, 4:21 pm
image

Advertisement

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அபிவிருத்தி  நிதியாக சுமார் 6 கோடி ரூபாவுக்கான ஒதுக்கீடு யார் மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தன் வசம் வைத்துக் கொள்ளும் நோக்கில் குறித்த அபிவிருத்தி நிதி ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான ஒதுக்கீடு கிடைக்க பெற்றுள்ளது.

ஏற்கனவே யாழ் தேர்தல் தொகுதிக்காக யாழ் மாவட்ட செயலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு சுமார் 4 கோடி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு சுமார் 2 கோடி மற்றும் வன்னி தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனுக்கு சுமார் 2 கோடி ரூபாய் என ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில்  யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமக்கும் ஜனாதிபதியின் விசேட  அபிவிருத்தி நிதி வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர். 

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திறகு சுமார் 4 கோடி 60 இலட்சம் மற்றும் செல்வராஜா கஜேந்திரனுக்கு சுமார் 2 கோடி க்கான அனுமதிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இவர்களுடன் சேர்த்து பாராளுமன்ற உறுப்பினரான எம் ஏ சுமந்திரனுக்கு சுமார் 4 கோடி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளது

கடந்த மாதம் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் வலையில் சிக்கிய கயேந்திரர்கள் - அபிவிருத்திக்கு 6 கோடி நிதி கிடைத்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விசேட அபிவிருத்தி  நிதியாக சுமார் 6 கோடி ரூபாவுக்கான ஒதுக்கீடு யார் மாவட்ட செயலகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை தன் வசம் வைத்துக் கொள்ளும் நோக்கில் குறித்த அபிவிருத்தி நிதி ஒதுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமான ஒதுக்கீடு கிடைக்க பெற்றுள்ளது.ஏற்கனவே யாழ் தேர்தல் தொகுதிக்காக யாழ் மாவட்ட செயலகத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு சுமார் 4 கோடி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுக்கு சுமார் 2 கோடி மற்றும் வன்னி தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனுக்கு சுமார் 2 கோடி ரூபாய் என ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்  யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தமக்கும் ஜனாதிபதியின் விசேட  அபிவிருத்தி நிதி வேண்டும் என ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்தனர். இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திறகு சுமார் 4 கோடி 60 இலட்சம் மற்றும் செல்வராஜா கஜேந்திரனுக்கு சுமார் 2 கோடி க்கான அனுமதிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து பாராளுமன்ற உறுப்பினரான எம் ஏ சுமந்திரனுக்கு சுமார் 4 கோடி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதுகடந்த மாதம் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement