இலங்கைக்கு கடத்தும் நோக்கில் தமிழகம் தனுஸ்கோடி கடற்கரையில் மறைத்து வைத்திருந்த பெருமளவு பாதணிகளை தமிழகப் பொலிசார் மீட்டுள்ளனர்.
தமிழகம் இராமேஸ்வரம் மாவட்டம் தனுஸ்கோடி கடற்கரையில் நேற்று இரவு 7.30 மணியளவில் பொலிசார் மேற்கொண்ட தேடுதலின்போதே இந்த பாத அணிகள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்ட பாத அணிகள் 3 உரப் பைகளில் பொதி செய்யப்பட்டு, மறைத்து வைத்திருந்த சமயமே பொலிசார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட பாதணிகளின் பெறுமதி இந்திய நாணயத்தில் நூறு ஆயிரம் ரூபாவிற்கும் மேற்பட்ட 306 சோடி சப்பாத்து காணப்பட்டன என பொலிசார் தெரிவித்துள்ளனர்.