• Sep 08 2024

கோர விபத்தில் சிக்கிய பேருந்து; 42 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்! முற்றாக தடைப்பட்ட வீதி

Chithra / Jul 11th 2024, 7:45 am
image

Advertisement

 

நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

இந்த விபத்தில் 42 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா கிரேன் ஹோட்டலில் தொழில் புரியும் ஊழியர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பேருந்து பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது 

குறித்த விபத்தின் போது சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

கோர விபத்தில் சிக்கிய பேருந்து; 42 இற்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் முற்றாக தடைப்பட்ட வீதி  நுவரெலியாவில் இருந்து திருகோணமலை நோக்கி சென்ற அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று இன்று விபத்துக்குள்ளாகியுள்ளதுஇந்த விபத்தில் 42 இற்கு மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் இன்று (11) அதிகாலை நுவரெலியா கண்டி வீதியில் லபுக்கலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்து காரணமாக நுவரெலியா கண்டி பிரதான வீதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.நுவரெலியா கிரேன் ஹோட்டலில் தொழில் புரியும் ஊழியர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. பேருந்து பாதையை விட்டு விலகி அருகில் இருந்த பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது குறித்த விபத்தின் போது சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளனர்.இதனையடுத்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement