ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி வேறு அரசியல் கட்சிகளில் இணையும் நபர்களுக்கு இருண்ட அரசியல் எதிர்காலம் இருப்பதாக சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகளில் சேருபவர்களின் தலைவிதி,
எதிர்வரும் தேர்தலில் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.