• Oct 11 2024

நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்கள் - லால்காந்த தெரிவித்துள்ளார்

Anaath / Oct 10th 2024, 10:51 am
image

Advertisement

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை எனவும்இ நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில் (09) பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் பின்னர்இ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே லால்காந்தஇ இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்  அவர்கருத்துத் தெரிவித்தபோது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எட்டாகப் பிளவுபட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பெயருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இல்லாமல் போய்விட்டது.

கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதி மக்களும் திசைகாட்டி சுற்றித் திரண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாவலப்பிட்டி தொகுதி மஹிந்தானந்த அளுத்கமவின் கோட்டையாக மாறியிருந்த நிலையில், அந்த கோட்டையை உடைத்து ஜனாதிபதி தேர்தலில் நாவலப்பிட்டி தொகுதியை வெற்றிபெற நாவலப்பிட்டி பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்தனர்.

தற்போது ஜனாதிபதி உட்பட இரண்டு அமைச்சர்கள் நாட்டின் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் பேணுவதற்கு செயற்பட்டு வருவதாகவும், பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்களை அமைச்சுக்களுக்கு நியமித்ததன் பின்னர் தேசிய மக்கள் சக்தி அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் செயற்படும் எனவும் லால்காந்த இதன்போது உறுதியளித்தார்.


நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்கள் - லால்காந்த தெரிவித்துள்ளார் தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடுக்கும் வகையில் எந்தவொரு கட்சியும் இல்லை எனவும்இ நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்தார்.நாவலப்பிட்டியில் (09) பொதுத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் பின்னர்இ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே லால்காந்தஇ இவ்வாறு தெரிவித்தார்.மேலும்  அவர்கருத்துத் தெரிவித்தபோது,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எட்டாகப் பிளவுபட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி பெயருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இல்லாமல் போய்விட்டது.கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதி மக்களும் திசைகாட்டி சுற்றித் திரண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.நாவலப்பிட்டி தொகுதி மஹிந்தானந்த அளுத்கமவின் கோட்டையாக மாறியிருந்த நிலையில், அந்த கோட்டையை உடைத்து ஜனாதிபதி தேர்தலில் நாவலப்பிட்டி தொகுதியை வெற்றிபெற நாவலப்பிட்டி பிரதேச மக்கள் நடவடிக்கை எடுத்தனர்.தற்போது ஜனாதிபதி உட்பட இரண்டு அமைச்சர்கள் நாட்டின் அத்தியாவசிய சேவைகளை மாத்திரம் பேணுவதற்கு செயற்பட்டு வருவதாகவும், பொதுத் தேர்தலின் பின்னர் அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்களை அமைச்சுக்களுக்கு நியமித்ததன் பின்னர் தேசிய மக்கள் சக்தி அனைத்தையும் நிறைவேற்றும் வகையில் செயற்படும் எனவும் லால்காந்த இதன்போது உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement