• Sep 20 2024

சிறுவனை வீதியில் இழுத்துச் சென்று தாக்கிய நபர் கைது..!

Chithra / Aug 6th 2024, 9:34 am
image

Advertisement

 

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு வீதி நாவலடி பகுதியில் சிறுவன் ஒருவரை கார்பட் வீதியில் இழுத்துச் சென்று தாக்கிய நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.

சிறுவனை தாக்கிய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

வாகன பழுதுபார்க்கும் நிலைய உரிமையாளர் ஒருவர், அவரது கடையில் சிறுவன் ஒருவர் திருடியதாக குற்றம் சுமத்தி இரும்புக் கம்பியை கையில் வைத்தவாறு சிறுவனை வீதியில் இழுத்துச் செல்லும் காட்சியை அவ் வீதியால் சென்ற நபரொருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்நிலையில், சிறுவன் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் கடை உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுவனை வீதியில் இழுத்துச் சென்று தாக்கிய நபர் கைது.  வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு வீதி நாவலடி பகுதியில் சிறுவன் ஒருவரை கார்பட் வீதியில் இழுத்துச் சென்று தாக்கிய நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது.சிறுவனை தாக்கிய சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.வாகன பழுதுபார்க்கும் நிலைய உரிமையாளர் ஒருவர், அவரது கடையில் சிறுவன் ஒருவர் திருடியதாக குற்றம் சுமத்தி இரும்புக் கம்பியை கையில் வைத்தவாறு சிறுவனை வீதியில் இழுத்துச் செல்லும் காட்சியை அவ் வீதியால் சென்ற நபரொருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.இந்நிலையில், சிறுவன் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், சிறுவனை தாக்கிய குற்றச்சாட்டில் கடை உரிமையாளர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement