• Mar 11 2026

உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது வெந்நீரை ஊற்றிய நபர்; வலியால் துடித்து அலறி ஓடிய நாய்!

dog
shanu / Sep 16th 2025, 3:46 pm
image

உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது  வெந்நீரை ஊற்றி  விரட்டியுள்ள சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பொகவந்தலாவில் உள்ள கடையொன்றில் இடம்பெற்றுள்ளது. 


குறித்த கடையொன்றிற்கு முன்னார் நாயொன்று யாருக்கும் தொந்தரவு செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்துள்ளது. 


அந்தக் கடைக்கு அருகிலுள்ள  பழைய இரும்புப் பொருட்களை சேகரிக்கும் கடையின் உரிமையாளர் அங்கு சென்றுள்ளார். 


அதன்போதே உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது வெந்நீரை ஊற்றியதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 


வெந்நீரை ஊற்றியதும் நாய், வலியால் அலறிக் கொண்டு ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். 


உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஈவிரக்கமின்றி ஐந்தறிவுடைய மிருக ஜாதிக்கு இவ்வாறான ஒரு செயலை செய்தமைக்கு பலர் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.

உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது வெந்நீரை ஊற்றிய நபர்; வலியால் துடித்து அலறி ஓடிய நாய் உறங்கிக் கொண்டிருந்த நாயின் மீது  வெந்நீரை ஊற்றி  விரட்டியுள்ள சம்பவம் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் பொகவந்தலாவில் உள்ள கடையொன்றில் இடம்பெற்றுள்ளது. குறித்த கடையொன்றிற்கு முன்னார் நாயொன்று யாருக்கும் தொந்தரவு செய்யாமல் தூங்கிக் கொண்டிருந்துள்ளது. அந்தக் கடைக்கு அருகிலுள்ள  பழைய இரும்புப் பொருட்களை சேகரிக்கும் கடையின் உரிமையாளர் அங்கு சென்றுள்ளார். அதன்போதே உறங்கிக் கொண்டிருந்த நாய் மீது வெந்நீரை ஊற்றியதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வெந்நீரை ஊற்றியதும் நாய், வலியால் அலறிக் கொண்டு ஓடியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஈவிரக்கமின்றி ஐந்தறிவுடைய மிருக ஜாதிக்கு இவ்வாறான ஒரு செயலை செய்தமைக்கு பலர் விமர்சனம் வெளியிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement