• Sep 08 2024

நெற்றியில் துப்பாக்கியை வைத்து இறுதி 'செல்பி' - காதல் உறவு முறிந்ததால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்த இளைஞன்..!

Chithra / May 24th 2024, 10:40 am
image

Advertisement


காலி - தெல்வத்த - மீட்டியாகொடை பகுதியில் உள்ள வீடொன்றில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்த இளைஞனின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.

ஹிக்கடுவை, தெல்வத்த - மெட்டிவல பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞன் தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு எடுத்த செல்பியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மகன் காலையில் எழுந்திருக்காத நிலையில் அறையின் கதவைத் திறந்தபோது, இவரது சடலம் தரையில் கிடப்பதைக் கண்டதாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் அருகில் இருந்த துப்பாக்கியை கருவா தோட்டத்தில் வீசியதாக தாயாரும், பாட்டியும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ள பயன்படுத்திய துப்பாக்கியை பொலிஸார் அங்கிருந்து மீட்டுள்ளனர்.

மேலும், இளைஞன் போதைக்கு அடிமையானவர் என்பதும், 

காதல் உறவு துண்டிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானவர் என்பதும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைஞனின் கைத்தொலைபேசியை பொலிஸார் ஆய்வு செய்ததில் இவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொள்வதற்கு முன் அவர் எடுத்த செல்பியைக் கண்டுபிடித்துள்ளனர்.

காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிரின் பணிப்புரையின் பேரில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நெற்றியில் துப்பாக்கியை வைத்து இறுதி 'செல்பி' - காதல் உறவு முறிந்ததால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்த இளைஞன். காலி - தெல்வத்த - மீட்டியாகொடை பகுதியில் உள்ள வீடொன்றில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்த இளைஞனின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டுள்ளது.ஹிக்கடுவை, தெல்வத்த - மெட்டிவல பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இளைஞன் தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு எடுத்த செல்பியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மகன் காலையில் எழுந்திருக்காத நிலையில் அறையின் கதவைத் திறந்தபோது, இவரது சடலம் தரையில் கிடப்பதைக் கண்டதாக தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.உயிரிழந்த இளைஞனின் அருகில் இருந்த துப்பாக்கியை கருவா தோட்டத்தில் வீசியதாக தாயாரும், பாட்டியும் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இளைஞன் உயிரை மாய்த்துக் கொள்ள பயன்படுத்திய துப்பாக்கியை பொலிஸார் அங்கிருந்து மீட்டுள்ளனர்.மேலும், இளைஞன் போதைக்கு அடிமையானவர் என்பதும், காதல் உறவு துண்டிக்கப்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளானவர் என்பதும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.இளைஞனின் கைத்தொலைபேசியை பொலிஸார் ஆய்வு செய்ததில் இவர் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்து கொள்வதற்கு முன் அவர் எடுத்த செல்பியைக் கண்டுபிடித்துள்ளனர்.காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த சந்திரசிரின் பணிப்புரையின் பேரில் மீட்டியாகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement