• Jul 27 2024

சிறுவயதில் தொலைந்து போன நபர் 22 வருடங்கள் கழித்து வீடு தேடி வந்த சுவாரஷ்ய சம்பவம்..!!

Tamil nila / Feb 10th 2024, 7:34 pm
image

Advertisement

சிறுவயதில் தொலைந்து போன ஒருவர் பல வருடங்கள் கழித்து சாமியாராக வீடு திரும்பிய ருசிகர சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

சிறுவனாக இருக்கும் போது தொலைந்து போன நபர், சுமார் 22 வருடங்கள் கழித்து துறவியாக மாறி வீடு திரும்பியுள்ளார்.

இத்தனை வருடங்கள் கழித்து ஏன் வீடு திரும்பினார் என்பதை கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

சரியாக 2002ம் ஆண்டு இவர் தொலைந்து போயுள்ளதுடன், இவருடைய பெயர் பிங்கு என தற்போது தெரிய வந்துள்ளது. 11 வயதில் தொலைந்து போனவர் என்ன செய்வது என்று தெரியாமல் ஊரெல்லாம் சுற்றியிருக்கிறார்.

இத்தனை வருடங்கள் கழித்து உத்தரபிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தரிசிக்கவே அவர் வீடு திரும்பியுள்ளார்.

பல வருடங்கள் கழித்து பிங்கு கிராமத்திற்கு வந்ததால் பலருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. பின்னர் தனது மாமாவிடமும் கிராமத்தில் உள்ள சில பெரியவர்களிடமும் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

உடனடியாக இந்த தகவல் டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த பிங்குவின் தந்தை ரதிபாலுக்கு தெரிய வர, அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து தனது மகனைக் அடையாளம் கண்டு கொண்டார்.

பிங்குவின் வயிற்றில் உள்ள காயத் தழும்பே அடையாளம் அவர் யார் என்று கண்டுபிடிக்க உதவியுள்ளது.

சினிமாவையும் மிஞ்சும் அளவு உள்ள இந்த ருசிகர சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சிறுவயதில் தொலைந்து போன நபர் 22 வருடங்கள் கழித்து வீடு தேடி வந்த சுவாரஷ்ய சம்பவம். சிறுவயதில் தொலைந்து போன ஒருவர் பல வருடங்கள் கழித்து சாமியாராக வீடு திரும்பிய ருசிகர சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் பதிவாகியுள்ளது.சிறுவனாக இருக்கும் போது தொலைந்து போன நபர், சுமார் 22 வருடங்கள் கழித்து துறவியாக மாறி வீடு திரும்பியுள்ளார்.இத்தனை வருடங்கள் கழித்து ஏன் வீடு திரும்பினார் என்பதை கேட்டால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.சரியாக 2002ம் ஆண்டு இவர் தொலைந்து போயுள்ளதுடன், இவருடைய பெயர் பிங்கு என தற்போது தெரிய வந்துள்ளது. 11 வயதில் தொலைந்து போனவர் என்ன செய்வது என்று தெரியாமல் ஊரெல்லாம் சுற்றியிருக்கிறார்.இத்தனை வருடங்கள் கழித்து உத்தரபிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலை தரிசிக்கவே அவர் வீடு திரும்பியுள்ளார்.பல வருடங்கள் கழித்து பிங்கு கிராமத்திற்கு வந்ததால் பலருக்கும் அவரை அடையாளம் தெரியவில்லை. பின்னர் தனது மாமாவிடமும் கிராமத்தில் உள்ள சில பெரியவர்களிடமும் தனது அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார்.உடனடியாக இந்த தகவல் டெல்லியில் பணியாற்றிக் கொண்டிருந்த பிங்குவின் தந்தை ரதிபாலுக்கு தெரிய வர, அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து தனது மகனைக் அடையாளம் கண்டு கொண்டார்.பிங்குவின் வயிற்றில் உள்ள காயத் தழும்பே அடையாளம் அவர் யார் என்று கண்டுபிடிக்க உதவியுள்ளது.சினிமாவையும் மிஞ்சும் அளவு உள்ள இந்த ருசிகர சம்பவம் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement