• Oct 03 2024

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மன்னாரை சேர்ந்தவர் யாழில் உயிரிழப்பு..!samugammedia

Tamil nila / Jan 17th 2024, 8:32 pm
image

Advertisement

மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மன்னாரை சேர்ந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனாவில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் உயிலங்குளம் மன்னாரைச் சேர்ந்த யாக்கோப்பு சூசைதாசன் (வயது- 67) என்பவராவார்.

பால் மற்றும் அரிசி வியாபாரம் செய்து வரும் குறித்த வயோதிபர் கடந்த 15 ஆம் திகதி  நானாட்டானிலிருந்து மன்னர் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதி தள்ளியுள்ளது.

இதில் படுகாயங்களுக்கு உள்ளானவர் மன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை(17) காலை 5:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இம்மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மன்னாரை சேர்ந்தவர் யாழில் உயிரிழப்பு.samugammedia மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மன்னாரை சேர்ந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ் போதனாவில் உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் உயிலங்குளம் மன்னாரைச் சேர்ந்த யாக்கோப்பு சூசைதாசன் (வயது- 67) என்பவராவார்.பால் மற்றும் அரிசி வியாபாரம் செய்து வரும் குறித்த வயோதிபர் கடந்த 15 ஆம் திகதி  நானாட்டானிலிருந்து மன்னர் நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவரை மோதி தள்ளியுள்ளது.இதில் படுகாயங்களுக்கு உள்ளானவர் மன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை(17) காலை 5:30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இம்மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement