• Sep 19 2024

புத்தளத்தில் நான்கு நாட்களில் பெருந்தொகையான மஞ்சள் மீட்பு!

Tamil nila / Jul 12th 2024, 10:21 pm
image

Advertisement

புத்தளம் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது கற்பிட்டி மற்றும் முந்தல் ஆகிய பகுதிகளில் இருந்து 2112 கிலோ கிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி மற்றும் புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட விஷேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

இலங்கையில் மஞ்சளின் விலை அதிக விலையில் விற்கப்படுவதனால், இவ்வாறு சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இந்த வகையில்,  முந்தல் - பள்ளிவாசல்பாடு கடற்பிரதேசத்தில் இருந்து 1373 கிலோ 700 கிராம் மஞ்சள் நேற்றுமுன்தினம்  மீட்கப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கடலில் இருந்து கரையை வந்தடைந்த டிங்கி இயந்திர படகு ஒன்றை பரிசோதனை செய்தனர்.

குறித்த டிங்கி இயந்திர படகில் 44 உர மூடைளில் அடைக்கப்பட்ட 1373 கிலோ 700 கிராம் மஞ்சள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த டிங்கி இயந்திர படகில் பயணித்த இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.

பெரிய அரச்சால் தீவுப் பகுதியில்  5 உர மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 262 கிலோ 300 கிராம் மஞ்சள் கடந்த 8ஆம் திகதி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

கற்பிட்டி - பராமுனை தீவுப் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 15 உர மூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 477 கிலோ மஞ்சள் கடற்படைநினரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புத்தளத்தில் நான்கு நாட்களில் பெருந்தொகையான மஞ்சள் மீட்பு புத்தளம் மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போது கற்பிட்டி மற்றும் முந்தல் ஆகிய பகுதிகளில் இருந்து 2112 கிலோ கிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படையினர் தெரிவித்தனர்.வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி மற்றும் புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் மேற்கொண்ட விஷேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போதே குறித்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.இலங்கையில் மஞ்சளின் விலை அதிக விலையில் விற்கப்படுவதனால், இவ்வாறு சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.இந்த வகையில்,  முந்தல் - பள்ளிவாசல்பாடு கடற்பிரதேசத்தில் இருந்து 1373 கிலோ 700 கிராம் மஞ்சள் நேற்றுமுன்தினம்  மீட்கப்பட்டுள்ளது.வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கடலில் இருந்து கரையை வந்தடைந்த டிங்கி இயந்திர படகு ஒன்றை பரிசோதனை செய்தனர்.குறித்த டிங்கி இயந்திர படகில் 44 உர மூடைளில் அடைக்கப்பட்ட 1373 கிலோ 700 கிராம் மஞ்சள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இதன் போது குறித்த டிங்கி இயந்திர படகில் பயணித்த இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.பெரிய அரச்சால் தீவுப் பகுதியில்  5 உர மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 262 கிலோ 300 கிராம் மஞ்சள் கடந்த 8ஆம் திகதி கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.கற்பிட்டி - பராமுனை தீவுப் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 15 உர மூடைகளில் அடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 477 கிலோ மஞ்சள் கடற்படைநினரால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement