• Mar 10 2025

மேர்வின் சில்வா 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

Chithra / Mar 7th 2025, 7:40 am
image

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்றுமுனதினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

இதேவேளை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் இன்னும் எனக்கொரு தெளிவு இல்லை என அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.

அவர் மக்கள் தொடர்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் களனி பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்று, அவரால் போலியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.

இதன்படியே, அவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும், இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விபரங்கள் எனக்கு தெரியாது எனவும் மேர்வின் சில்வாவின் மனைவி கூறியுள்ளார்.

நாங்கள் வீட்டில் இருந்த போது, அடையாள அட்டையை காட்டிய 4 பேர் அவரை கைது செய்து 

அழைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.

மேர்வின் சில்வா 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்றுமுனதினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதேவேளை முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் இன்னும் எனக்கொரு தெளிவு இல்லை என அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் மார்வின் சில்வா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டார்.அவர் மக்கள் தொடர்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் களனி பிரதேசத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்று, அவரால் போலியாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடு கிடைத்திருந்தது.இதன்படியே, அவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டிருந்தார்.எனினும், இந்த சம்பவம் 2015ஆம் ஆண்டு இடம்பெற்றதாகவும் இது தொடர்பான சரியான விபரங்கள் எனக்கு தெரியாது எனவும் மேர்வின் சில்வாவின் மனைவி கூறியுள்ளார்.நாங்கள் வீட்டில் இருந்த போது, அடையாள அட்டையை காட்டிய 4 பேர் அவரை கைது செய்து அழைத்து சென்றதாக அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement