• Sep 29 2024

வடக்கு மக்களுக்கு சீனி தட்டுப்பாடு ஏற்படாதிருக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை! samugammedia

Tamil nila / Dec 3rd 2023, 6:51 pm
image

Advertisement

வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்களின்  தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  போதியளவு சீனி இல்லாமல் இருப்பதாக  பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பொது முகாமையாளரினால்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இதுதொடர்பில் துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடிய நிலையில் 100 மெற்றிக்தொன் சீனியை வடக்கிற்கு பெற்றுக் கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

எனவே குறித்த சீனியை வடக்கு மாகாணத்தில் உள்ள 48 பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாக நியாயமான விலையில் மக்களுக்கு விநியோகிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கூட்டுறவு அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்றது  குறிப்பிடத்தக்கது.

வடக்கு மக்களுக்கு சீனி தட்டுப்பாடு ஏற்படாதிருக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை samugammedia வடக்கு மாகாணத்தில் மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சீனி விநியோகத்தினை சீர்செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மக்களின்  தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  போதியளவு சீனி இல்லாமல் இருப்பதாக  பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களின் வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பொது முகாமையாளரினால்,  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இதுதொடர்பில் துறைசார் அமைச்சருடன் கலந்துரையாடிய நிலையில் 100 மெற்றிக்தொன் சீனியை வடக்கிற்கு பெற்றுக் கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.எனவே குறித்த சீனியை வடக்கு மாகாணத்தில் உள்ள 48 பல நோக்கு கூட்டுறவு சங்கங்களின் ஊடாக நியாயமான விலையில் மக்களுக்கு விநியோகிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சியில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கூட்டுறவு அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்றது  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement