• Oct 02 2024

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு...!samugammedia

Anaath / Dec 28th 2023, 5:25 pm
image

Advertisement

தலைமன்னார் பொலிஸ்    பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று (28) காலை உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் மரியதாஸ் ரொனால்ட் ரீகன் (வயது-43) இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளி என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அண்மையில் பெய்து வரும் கனமழை காரணமாக குறித்த  கிராமத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் மழை வெள்ளத்தில்  பாதிக்கப்பட்டுள்ள தனது இல்லத்தில் கடந்த 26 ஆம் திகதி இரவு தனது வேலையை முடித்த நிலையில்  உறக்கத்திற்கு சென்றுள்ளார்.

உறக்கத்திற்கு சென்ற நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த நபரை கடந்த இரண்டு நாட்கள் காணாத நிலையில் உயிரிழந்த நபரின் நண்பர் ஒருவர் இன்று (28) காலை அவரை  அவரது இல்லத்தில் தேடிச்சென்ற நிலையில் மழை வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக குறித்த நபர் உரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர்களுக்கு தகவலை தெரிவித்து தலைமன்னார் போலீசாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.

இவரது சடலம் தண்ணீரில் இருந்து மீட்டு வீட்டின் அருகாமையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும்  குறித்த நபர் வலிப்பு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

சம்பவ இடத்திற்கு வந்த தலைமன்னார் பொலிஸ்  மற்றும் தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சடலம் மேலதிக பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மனைவி பிள்ளைகள் மழை வெள்ளம் காரணமாக அருகாமையில் வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் இவர்  தனது இல்லத்தில் உறங்கச் சென்ற நிலையிலையே இன்றைய தினம் (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு.samugammedia தலைமன்னார் பொலிஸ்    பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று (28) காலை உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.சடலமாக மீட்கப்பட்டவர் மரியதாஸ் ரொனால்ட் ரீகன் (வயது-43) இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலி தொழிலாளி என தெரியவந்துள்ளது.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,அண்மையில் பெய்து வரும் கனமழை காரணமாக குறித்த  கிராமத்தில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.இந்த நிலையில் மழை வெள்ளத்தில்  பாதிக்கப்பட்டுள்ள தனது இல்லத்தில் கடந்த 26 ஆம் திகதி இரவு தனது வேலையை முடித்த நிலையில்  உறக்கத்திற்கு சென்றுள்ளார்.உறக்கத்திற்கு சென்ற நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை குறித்த குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அத்துடன் குறித்த நபரை கடந்த இரண்டு நாட்கள் காணாத நிலையில் உயிரிழந்த நபரின் நண்பர் ஒருவர் இன்று (28) காலை அவரை  அவரது இல்லத்தில் தேடிச்சென்ற நிலையில் மழை வெள்ளத்தில் இறந்து கிடந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.உடனடியாக குறித்த நபர் உரிழந்தவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் உறவினர்களுக்கு தகவலை தெரிவித்து தலைமன்னார் போலீசாருக்கு தகவலை வழங்கியுள்ளார்.இவரது சடலம் தண்ணீரில் இருந்து மீட்டு வீட்டின் அருகாமையில் வைக்கப்பட்டுள்ளது.மேலும்  குறித்த நபர் வலிப்பு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.சம்பவ இடத்திற்கு வந்த தலைமன்னார் பொலிஸ்  மற்றும் தடவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் சடலம் மேலதிக பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மனைவி பிள்ளைகள் மழை வெள்ளம் காரணமாக அருகாமையில் வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் இவர்  தனது இல்லத்தில் உறங்கச் சென்ற நிலையிலையே இன்றைய தினம் (28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement