• Sep 17 2024

இலங்கையில் மாயமான இளம் தாயும் மகளும்..! பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

Chithra / Jun 5th 2024, 8:21 am
image

Advertisement

 

கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போன பெண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், 

பெண் மற்றும் அவரது மகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும் என அறிவித்துள்ளனர்.

கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

யசோதா ஹன்சனி என்ற 26 வயதுடைய பெண்ணும் அவரது 04 வயது மகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, குறித்த பெண் மற்றும் அவரது மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருப்பின் 071-859 1639 ( கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) அல்லது 011-225 2222 (கட்டுநாயக்க பொலிஸ் நிலையம்) என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் மாயமான இளம் தாயும் மகளும். பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்  கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போன பெண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், பெண் மற்றும் அவரது மகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும் என அறிவித்துள்ளனர்.கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.யசோதா ஹன்சனி என்ற 26 வயதுடைய பெண்ணும் அவரது 04 வயது மகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்படி, குறித்த பெண் மற்றும் அவரது மகள் தொடர்பில் ஏதேனும் தகவல் இருப்பின் 071-859 1639 ( கட்டுநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி) அல்லது 011-225 2222 (கட்டுநாயக்க பொலிஸ் நிலையம்) என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement