• Feb 06 2025

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சுட்டுக் கொலை

Chithra / Dec 9th 2024, 7:22 am
image

 

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட வீதியில் உள்ள கௌடங்கஹா பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியதில், காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மகேவிட பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சுட்டுக் கொலை  கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்மிட வீதியில் உள்ள கௌடங்கஹா பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடியதில், காயமடைந்த நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் மகேவிட பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.சடலம் கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement