• Sep 08 2024

பேருந்தில் பயணித்த யுவதியின் தலை முடியை வெட்டிய மௌலவி - மடக்கிப்பிடித்த பயணிகள்

Chithra / Jul 14th 2024, 12:04 pm
image

Advertisement


பேருந்தில் பயணித்த 27 வயதுடைய பெண்ணின் தலை முடியை வெட்டியதாக கூறப்படும் முருதலாவ பிரதேச பள்ளியொன்றின் மௌலவி என கூறப்படும் நபரை கண்டி தலைமையக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் முர்தலாவ தெஹியங்க வடக்கு பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கட்டுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில்  குறித்த பெண் அமர்ந்திருந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்த நபர்,

பெண்ணின் தலைமுடியை வெட்டியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேநேரம் சம்பவத்தை எதிர்கொண்ட யுவதி, சந்தேகநபரையும் அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளார்.

மடவளை பிரதேசத்தில் வசிக்கும் யுவதி சில தேவைகளுக்காக கண்டி நோக்கி பயணித்த வேளையில் இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார், 

யுவதி அவர் அறிவித்ததன் பிரகாரம் பயணிகள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


பேருந்தில் பயணித்த யுவதியின் தலை முடியை வெட்டிய மௌலவி - மடக்கிப்பிடித்த பயணிகள் பேருந்தில் பயணித்த 27 வயதுடைய பெண்ணின் தலை முடியை வெட்டியதாக கூறப்படும் முருதலாவ பிரதேச பள்ளியொன்றின் மௌலவி என கூறப்படும் நபரை கண்டி தலைமையக பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் முர்தலாவ தெஹியங்க வடக்கு பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கட்டுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில்  குறித்த பெண் அமர்ந்திருந்த ஆசனத்தின் பின் இருக்கையில் அமர்ந்த நபர்,பெண்ணின் தலைமுடியை வெட்டியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.அதேநேரம் சம்பவத்தை எதிர்கொண்ட யுவதி, சந்தேகநபரையும் அவர் வெட்டிய தலைமுடியின் பகுதியையும் தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக எடுத்துள்ளார்.மடவளை பிரதேசத்தில் வசிக்கும் யுவதி சில தேவைகளுக்காக கண்டி நோக்கி பயணித்த வேளையில் இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார், யுவதி அவர் அறிவித்ததன் பிரகாரம் பயணிகள் சந்தேக நபரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement