முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப் பகுதிகளில் சுகாதார சீர்கேடான முறையில் இயங்கிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இரணைப்பாலையில் உள்ள வர்த்தக நிலையங்கள் சுகாதார சீர்கேடான முறையில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் முறைப்பாட்டினையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களினால் அந்தப் பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஒரு வர்த்தக நிலையத்தில் காலாவதியான வண்டுமொய்த்த உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதனையடுத்து குறித்த நிலைய உரிமையாளர் நேற்று (30)முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவருக்கு 7500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
அத்துடன் இரணைப்பாலை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், பொலித்தீன் பைகள் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்கள் வீதியோரங்களில், வாய்க்கால்களில் வீசிய வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த வர்த்தகருக்கு எதிராக 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
இந்த சோதனையை கோம்பாவில் சுகாதார பரிசோதகர் ஆ.சுரேஸ்ஆனந்தன், புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர் கோகுலன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வர்த்தக நிலையங்கள் ; உரிமையாளர்களுக்கு தண்டம் விதித்த முல்லை.நீதிமன்று முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப் பகுதிகளில் சுகாதார சீர்கேடான முறையில் இயங்கிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இரணைப்பாலையில் உள்ள வர்த்தக நிலையங்கள் சுகாதார சீர்கேடான முறையில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற பொதுமக்களின் முறைப்பாட்டினையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களினால் அந்தப் பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஒரு வர்த்தக நிலையத்தில் காலாவதியான வண்டுமொய்த்த உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதனையடுத்து குறித்த நிலைய உரிமையாளர் நேற்று (30)முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவருக்கு 7500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.அத்துடன் இரணைப்பாலை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், பொலித்தீன் பைகள் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்கள் வீதியோரங்களில், வாய்க்கால்களில் வீசிய வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் குறித்த வர்த்தகருக்கு எதிராக 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையை கோம்பாவில் சுகாதார பரிசோதகர் ஆ.சுரேஸ்ஆனந்தன், புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர் கோகுலன் ஆகியோர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.