• Sep 08 2024

வல்லை மண்ணை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி..! அணிதிரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள்...!

Sharmi / May 14th 2024, 3:14 pm
image

Advertisement

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் இன்றையதினம்(14) காலை 11மணியளவில் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும்  விநியோகிக்கப்பட்டது. 

இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தியானது தொடர்ந்து  நெல்லியடி மற்றும் அச்சுவேலியிலும் நாளை 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும். 

இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை மத்திய பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும். 

அதேவேளை, முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் ஊர்தி தங்கள் பிரதேசங்களுக்கு வருகை தரும்போது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.


வல்லை மண்ணை வந்தடைந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தி. அணிதிரண்டு அஞ்சலி செலுத்திய மக்கள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் இன்றையதினம்(14) காலை 11மணியளவில் வல்வெட்டித்துறை ஆலடிச் சந்தியில், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து பொதுச்சுடரேற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும்  விநியோகிக்கப்பட்டது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்தியானது தொடர்ந்து  நெல்லியடி மற்றும் அச்சுவேலியிலும் நாளை 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும். இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை மத்திய பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும். அதேவேளை, முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் ஊர்தி தங்கள் பிரதேசங்களுக்கு வருகை தரும்போது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement