• Sep 17 2024

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி முன்னெடுப்பு...!

Sharmi / May 13th 2024, 5:40 pm
image

Advertisement

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவணியும் இன்று(13)  காலை 10;30மணியளவில் சாவகச்சேரி பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் சிவன் ஆலயத்தில் திருமதி சசிகலா ரவிராஜின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி பொதுச்சுடர் முன்னாள் பேராளியும், முன்னாள் உபதவிசாளருமான விஜயனால் ஏற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும்  விநியோகிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழின படுகொலை அடையாளப்படுத்தும்  முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியும்  இதேவேளை  முள்ளிவாய்க்கால் கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது.

இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து படுகொலை செய்யபட்ட மாமனிதர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரவிராஜ்ஜின் திருவுருவ சிலை முன்றலிலும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி விநியோகிக்கப்பட்டது 

இதேவேளை தொடர்ந்து கொடிகாமத்திலும் நாளை   14ஆம் திகதி வடமராட்சியிலும், 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும். 

இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும். 

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனி முன்னெடுப்பு. இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவணியும் இன்று(13)  காலை 10;30மணியளவில் சாவகச்சேரி பேரூந்து நிலையத்திற்கு அண்மையில் சிவன் ஆலயத்தில் திருமதி சசிகலா ரவிராஜின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.இதன் பொழுது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூறி பொதுச்சுடர் முன்னாள் பேராளியும், முன்னாள் உபதவிசாளருமான விஜயனால் ஏற்றி வைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சியும்  விநியோகிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து தமிழின படுகொலை அடையாளப்படுத்தும்  முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியும்  இதேவேளை  முள்ளிவாய்க்கால் கஞ்சியும் விநியோகிக்கப்பட்டது. இதன் பொழுது முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுபிரசுரமும் வழங்கி வைக்கப்பட்டது.தொடர்ந்து படுகொலை செய்யபட்ட மாமனிதர் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரவிராஜ்ஜின் திருவுருவ சிலை முன்றலிலும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி விநியோகிக்கப்பட்டது இதேவேளை தொடர்ந்து கொடிகாமத்திலும் நாளை   14ஆம் திகதி வடமராட்சியிலும், 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும். இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்பொழுது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement