நல்லூர் திருவிழா ஆலய வீதி வெப்பத்தை குறைக்க முதல்வர் மதிவதனி விசேட நடவடிக்கை
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நிறைவுக்காலப்பகுதியை எட்டியுள்ள நிலையில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கோவில் முன்வீதியில் நடந்து செல்லும் போது அதிக வெப்பத்தால் நடந்து செல்வதில் சிரமத்தை எதிர்கொள்வதால் வெப்பத்தை குறைத்து வீதியை குளிர்மையாக்குவதற்காக மாநகரசபையினால் குறிக்கப்பட்ட நேரத்திற்கு, நேரம் நீர் விசிறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந் நிலையில் நாளாந்தம் அதிகரிக்கும் அதீத வெயில், வெப்பம் காரணமாக கோவில் வரை நடந்து செல்வதற்கு பக்தர்கள் பாரிய இடர்களை எதிர்கொள்வதாக முதல்வரின் கவனத்திற்கு பலராலும் கொண்டுவரப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் முதல்வரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கோவில் முன் வீதியின் அதீத வெப்பத்தை குறைத்து, விசிறப்படும் நீரை அதிகநேரம் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் சாக்குகள் போட்டு, மணல் தூவி நீர் விசிறும் விசேட நடவடிக்கை மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டது.
இந் நடவடிக்கையினை பிரதி முதல்வர் மற்றும் மராமத்துக்குழு தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்து செயற்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
நல்லூர் திருவிழா ஆலய வீதி வெப்பத்தை குறைக்க முதல்வர் மதிவதனி விசேட நடவடிக்கை நல்லூர் திருவிழா ஆலய வீதி வெப்பத்தை குறைக்க முதல்வர் மதிவதனி விசேட நடவடிக்கைநல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த திருவிழா நிறைவுக்காலப்பகுதியை எட்டியுள்ள நிலையில் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் கோவில் முன்வீதியில் நடந்து செல்லும் போது அதிக வெப்பத்தால் நடந்து செல்வதில் சிரமத்தை எதிர்கொள்வதால் வெப்பத்தை குறைத்து வீதியை குளிர்மையாக்குவதற்காக மாநகரசபையினால் குறிக்கப்பட்ட நேரத்திற்கு, நேரம் நீர் விசிறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இந் நிலையில் நாளாந்தம் அதிகரிக்கும் அதீத வெயில், வெப்பம் காரணமாக கோவில் வரை நடந்து செல்வதற்கு பக்தர்கள் பாரிய இடர்களை எதிர்கொள்வதாக முதல்வரின் கவனத்திற்கு பலராலும் கொண்டுவரப்பட்டது.குறித்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் முதல்வரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கோவில் முன் வீதியின் அதீத வெப்பத்தை குறைத்து, விசிறப்படும் நீரை அதிகநேரம் தக்கவைத்துக் கொள்ளும் வகையில் சாக்குகள் போட்டு, மணல் தூவி நீர் விசிறும் விசேட நடவடிக்கை மாநகரசபையினால் முன்னெடுக்கப்பட்டது.இந் நடவடிக்கையினை பிரதி முதல்வர் மற்றும் மராமத்துக்குழு தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்து செயற்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.