• Jan 15 2025

விவசாயிகளின் உற்பத்தி செலவினை குறைப்பதற்கு நடவடிக்கை; அரசாங்கத்திடம் தேசிய கமக்காரர் அதிகார சபை கோரிக்கை..!

Sharmi / Dec 9th 2024, 10:23 am
image

விவசாயிகளின் உற்பத்தி செலவினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்பதுடன் பதுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டுவருவதன் மூலம் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை நீக்க முடியும் என தேசிய கமக்காரர் அதிகார சபையின் தலைவர் திலக் பண்டார தெரிவித்தார்.

தேசிய கமக்கார அதிகார அதிகார சபையின் ஊடக சந்திப்பு  மட்டக்களப்பிலுள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது தேசிய கமக்கார அதிகார அதிகார சபையின் தலைவர், பொருளாளர், உப செயலாளர் உள்ளிட்ட தேசிய அதிகார சபையின் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பில் தேசிய அதிகார சபையின் தலைவர்  மு.மு.து.திலக் பண்டார கருத்து தெரிவிக்கையில், 

விவசாயிகளாகிய எங்களை அறியாமல் அரசினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் நாங்கள் கவலை தெரிவிக்கின்றோம்.

மட்டக்களப்பில் 2 இலட்சம் ஏக்கர் விதைத்திருந்தாலும் அதில் 1 1/2 இலட்சத்திற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னமும் மட்டக்களப்பில் வெள்ள நீர் வயல்களில் இருந்து வடிந்தோடவில்லை.  இதுவரை பழமையான சுற்றுநிருபத்தை வைத்தே நஸ்டஈடுகளை வழங்க தீர்மானித்துள்ளமை கவலை அழிக்கின்றது.

இவர்கள் பசளை உள்ளிட்ட பல விடயங்களுக்கு அதிக பணத்தினை செலவழித்தாலும் இவர்களுக்கு வழங்கும் நஸ்ட ஈடு போதுமானதாக இல்லை என நாம் அரசிற்கு அறியத்தருகின்றோம்.

ஏக்கருக்கு 8 ஆயிரம் போதுமானதாக இல்லை. சில இடங்களில் வயல்களில் மண் மூடியிருக்கின்றது.

வெள்ள நீர் வடியவில்லை அதை நாம் நேரடியாக காண்கின்றோம். விவசாயிகளுக்கு எதிராக மடு கிண்ட நினைக்க வேண்டாம் என அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.

டட்லி முதலாளி போன்றோர்களை வைத்து விலை தொடர்பில் கதைத்தார்கள், ஜனாதிபதி பல கருத்துக்களை சொன்னாலும், ஒழித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டு வர முடியும்.

வெட்டும் நாட்கள் வரும் போது  நெல் குறைந்த விலையிலேயே எடுக்கப்படுகின்றது.

உற்பத்தி விலையை குறைப்பதற்கான ஏற்பாட்டினை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் தேசிய அதிகார சபையின் உப செயலாளர்  தக்சில தேசப் பிரிய கருத்து தெரிவிக்கையில், 

மரத்தால் விழுந்த வரை மாடு மிதிப்பது போலவே தற்போது விவசாயிகளின் நிலை காணப்படுகின்றது.

நாங்கள் விவசாய அமைச்சிற்கு ஒரு கோரிக்கையினை முன்வைக்கவுள்ளோம் அதனை வழங்கி 7 நாட்களில் எமக்கு தீர்வு கிடைக்காவிடின் விவசாயிகள் நாங்கள் யார் என்பதை அரசுக்கு காட்டுவோம்.

கடன்பட்டு வயல் செய்த விவசாயிகளுக்கு உரிய நஸ்ட ஈடு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரை கேட்டுக் கொள்கின்றோம்.

விவசாயிகளுடன் கலந்துரையாட அரசாங்கத்தை நாங்கள் அழைக்கின்றோம். ஒரு இலட்சம் நஸ்ட ஈட்டினை நாங்கள் விவசாயிகளுக்கு எதிர்பார்க்கின்றோம்.

அரசின் விலை தீர்மானித்திருந்தாலும், 220 ரூபா என்பது அனைவரையும் கஸ்டத்திற்கு உள்ளாக்கும் விடையமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இது வியாபாரிகளுக்கு  அதிக இலாபத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவே பார்க்கின்றோம்  எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகார சபையின் தலைவர் சந்திரசேகரம் சந்திரமோகன் கருத்து தெரிவிக்கையில், 

பெரும் போக வெள்ள அனர்த்தத்தினை தேசிய அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டோர் பார்வையிட வந்துள்ள நிலையில் எமது வயல் நிலத்தை மீண்டும் திருத்துவதாயின் ஒரு ஏக்கருக்கு 1 இலட்சம் வரை தேவைப்படும். அதற்கான நஸ்ட ஈட்டினை வழங்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

உர மானியம் கோரியவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்க முடியாது என அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாம் பொறுப்பு அல்ல. விவசாய திணைக்களமே பொறுப்பு என கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தேசிய அதிகார சபையின் நிறைவேற்று குழு உறுப்பினர் ரமேஸ்  கருத்து தெரிவிக்கையில், 

காப்புறுதி கொடுப்பனவினை அரசாங்கம் கொடுத்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை. மட்டக்களப்பில் மழை பெய்யாது விட்டாலும் பதுளை போன்ற பகுதிகளில் இருந்து வரும் நீரினால் வயல்கள் மூழ்கடிக்கப்படுகின்றன.

இந்த ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்த போது வெளிநாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்து வைக்கப்பட்டிருந்தது.

220 ரூபாய் விலை நிர்ணயித்திருப்பது பொருத்தமான விடையம் அல்ல. 200 ரூபாய்க்கு அரிசியை வழங்க முடியுமென நான் தெரிவிக்கின்றேன் என்றார்.


விவசாயிகளின் உற்பத்தி செலவினை குறைப்பதற்கு நடவடிக்கை; அரசாங்கத்திடம் தேசிய கமக்காரர் அதிகார சபை கோரிக்கை. விவசாயிகளின் உற்பத்தி செலவினை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்பதுடன் பதுக்கிவைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டுவருவதன் மூலம் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை நீக்க முடியும் என தேசிய கமக்காரர் அதிகார சபையின் தலைவர் திலக் பண்டார தெரிவித்தார்.தேசிய கமக்கார அதிகார அதிகார சபையின் ஊடக சந்திப்பு  மட்டக்களப்பிலுள்ள கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மண்டபத்தில் இடம்பெற்றது.இதன் போது தேசிய கமக்கார அதிகார அதிகார சபையின் தலைவர், பொருளாளர், உப செயலாளர் உள்ளிட்ட தேசிய அதிகார சபையின் நிறைவேற்று குழு உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.இது தொடர்பில் தேசிய அதிகார சபையின் தலைவர்  மு.மு.து.திலக் பண்டார கருத்து தெரிவிக்கையில், விவசாயிகளாகிய எங்களை அறியாமல் அரசினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் நாங்கள் கவலை தெரிவிக்கின்றோம்.மட்டக்களப்பில் 2 இலட்சம் ஏக்கர் விதைத்திருந்தாலும் அதில் 1 1/2 இலட்சத்திற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இன்னமும் மட்டக்களப்பில் வெள்ள நீர் வயல்களில் இருந்து வடிந்தோடவில்லை.  இதுவரை பழமையான சுற்றுநிருபத்தை வைத்தே நஸ்டஈடுகளை வழங்க தீர்மானித்துள்ளமை கவலை அழிக்கின்றது.இவர்கள் பசளை உள்ளிட்ட பல விடயங்களுக்கு அதிக பணத்தினை செலவழித்தாலும் இவர்களுக்கு வழங்கும் நஸ்ட ஈடு போதுமானதாக இல்லை என நாம் அரசிற்கு அறியத்தருகின்றோம்.ஏக்கருக்கு 8 ஆயிரம் போதுமானதாக இல்லை. சில இடங்களில் வயல்களில் மண் மூடியிருக்கின்றது. வெள்ள நீர் வடியவில்லை அதை நாம் நேரடியாக காண்கின்றோம். விவசாயிகளுக்கு எதிராக மடு கிண்ட நினைக்க வேண்டாம் என அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.டட்லி முதலாளி போன்றோர்களை வைத்து விலை தொடர்பில் கதைத்தார்கள், ஜனாதிபதி பல கருத்துக்களை சொன்னாலும், ஒழித்து வைக்கப்பட்டுள்ள நெல்லை வெளியில் கொண்டு வர முடியும்.வெட்டும் நாட்கள் வரும் போது  நெல் குறைந்த விலையிலேயே எடுக்கப்படுகின்றது.உற்பத்தி விலையை குறைப்பதற்கான ஏற்பாட்டினை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பில் தேசிய அதிகார சபையின் உப செயலாளர்  தக்சில தேசப் பிரிய கருத்து தெரிவிக்கையில், மரத்தால் விழுந்த வரை மாடு மிதிப்பது போலவே தற்போது விவசாயிகளின் நிலை காணப்படுகின்றது.நாங்கள் விவசாய அமைச்சிற்கு ஒரு கோரிக்கையினை முன்வைக்கவுள்ளோம் அதனை வழங்கி 7 நாட்களில் எமக்கு தீர்வு கிடைக்காவிடின் விவசாயிகள் நாங்கள் யார் என்பதை அரசுக்கு காட்டுவோம்.கடன்பட்டு வயல் செய்த விவசாயிகளுக்கு உரிய நஸ்ட ஈடு வழங்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சரை கேட்டுக் கொள்கின்றோம்.விவசாயிகளுடன் கலந்துரையாட அரசாங்கத்தை நாங்கள் அழைக்கின்றோம். ஒரு இலட்சம் நஸ்ட ஈட்டினை நாங்கள் விவசாயிகளுக்கு எதிர்பார்க்கின்றோம்.அரசின் விலை தீர்மானித்திருந்தாலும், 220 ரூபா என்பது அனைவரையும் கஸ்டத்திற்கு உள்ளாக்கும் விடையமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இது வியாபாரிகளுக்கு  அதிக இலாபத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகவே பார்க்கின்றோம்  எனவும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட கமக்கார அதிகார சபையின் தலைவர் சந்திரசேகரம் சந்திரமோகன் கருத்து தெரிவிக்கையில், பெரும் போக வெள்ள அனர்த்தத்தினை தேசிய அதிகார சபையின் தலைவர் உள்ளிட்டோர் பார்வையிட வந்துள்ள நிலையில் எமது வயல் நிலத்தை மீண்டும் திருத்துவதாயின் ஒரு ஏக்கருக்கு 1 இலட்சம் வரை தேவைப்படும். அதற்கான நஸ்ட ஈட்டினை வழங்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.உர மானியம் கோரியவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்க முடியாது என அரசு அறிவித்துள்ளது. இதற்கு நாம் பொறுப்பு அல்ல. விவசாய திணைக்களமே பொறுப்பு என கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.தேசிய அதிகார சபையின் நிறைவேற்று குழு உறுப்பினர் ரமேஸ்  கருத்து தெரிவிக்கையில், காப்புறுதி கொடுப்பனவினை அரசாங்கம் கொடுத்திருந்தாலும் அது போதுமானதாக இல்லை. மட்டக்களப்பில் மழை பெய்யாது விட்டாலும் பதுளை போன்ற பகுதிகளில் இருந்து வரும் நீரினால் வயல்கள் மூழ்கடிக்கப்படுகின்றன.இந்த ஜனாதிபதி விவசாய அமைச்சராக இருந்த போது வெளிநாட்டிற்கு அரிசி ஏற்றுமதி செய்து வைக்கப்பட்டிருந்தது.220 ரூபாய் விலை நிர்ணயித்திருப்பது பொருத்தமான விடையம் அல்ல. 200 ரூபாய்க்கு அரிசியை வழங்க முடியுமென நான் தெரிவிக்கின்றேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement