• Sep 28 2024

இடைக்கால பாதீட்டை நவம்பரில் கொண்டு வர புதிய அரசாங்கம் திட்டம்

Chithra / Sep 27th 2024, 3:10 pm
image

Advertisement

 

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையால் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இடைக்கால பாதீட்டினை புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். 

அதேநேரம், 2025ஆம் ஆண்டுக்கான முழுமையான பாதீடு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இடைக்கால பாதீட்டை நவம்பரில் கொண்டு வர புதிய அரசாங்கம் திட்டம்  பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையால் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான இடைக்கால பாதீட்டினை புதிய நாடாளுமன்றம் கூடவுள்ள எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கொண்டு வருவதற்கு புதிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். அதேநேரம், 2025ஆம் ஆண்டுக்கான முழுமையான பாதீடு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழுவின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement