• Sep 29 2024

குற்றம் சுமத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை - அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த புதிய அரசு

Chithra / Sep 29th 2024, 7:24 am
image

Advertisement

 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத்தயங்கப் போவதில்லை என பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதியை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

எங்கள் ஆட்சியில் யாரேனும் குற்றம் சாட்டப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம். நாங்கள் ஏற்கனவே நேர்மறையான மாற்றங்களைச் செய்து வருகிறோம். 

இதுபோன்ற மாற்றங்கள் தொடரும். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் சிலர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து அரச ஊழியர்களை அழைத்து வர முடியாது. இருப்பவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். 

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டால் கடுமையான நடவடிக்கை - அரச அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த புதிய அரசு  தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அரச அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டால், அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கத்தயங்கப் போவதில்லை என பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.நேற்றையதினம் கண்டியில் அஸ்கிரிய பீடாதிபதியை தரிசனம் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.எங்கள் ஆட்சியில் யாரேனும் குற்றம் சாட்டப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம். நாங்கள் ஏற்கனவே நேர்மறையான மாற்றங்களைச் செய்து வருகிறோம். இதுபோன்ற மாற்றங்கள் தொடரும். குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் சிலர் மீது ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.வெளியில் இருந்து அரச ஊழியர்களை அழைத்து வர முடியாது. இருப்பவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து நியமனங்களுக்கும் அரசாங்கமே பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement