சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பில் நீதி அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதி விடுவிக்கப்பட்ட சர்ச்சையில், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து விலகினார்.
அவர் பதவி விலகியதை அடுத்து சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டதையடுத்து புதிய ஊடகப்பேச்சாளராக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்கவுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு புதிய ஊடகப் பேச்சாளர் நியமனம். சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஊடகப் பேச்சாளராக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பில் நீதி அமைச்சுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து ஒரு கைதி விடுவிக்கப்பட்ட சர்ச்சையில், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து விலகினார். அவர் பதவி விலகியதை அடுத்து சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டதையடுத்து புதிய ஊடகப்பேச்சாளராக சிறைச்சாலை ஆணையாளர் ஜகத் வீரசிங்கவுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.