• May 18 2024

எதிர்வரும் ஆண்டில் மீண்டும் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம்? நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!

Chithra / Dec 2nd 2023, 9:32 am
image

Advertisement

 

எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில்  உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான சட்டமொன்றை கொண்டுவர 2018 ஆம் ஆண்டில் கொள்கை ரீதியாக நாம் தீர்மானித்தோம்.

நாடாளுமன்றிலும் இந்த சட்டமூலத்தை நாம் தாக்கல் செய்திருந்தோம். இது உயர்நீதிமன்றினால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது.

இறுதியாக இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோதுதான், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது.

இதனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மனநிலையும் மாற்றமடைந்து, நாட்டில் குழப்பமானதொரு சூழல் நிலவியது.

தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் கீழ், சட்டமூலமொன்றை சமர்ப்பித்திருந்தோம். இது சற்று கடுமையான சரத்துக்களை கொண்டிப்பதாக எதிர்ப்புக்களும் வெளியிடப்பட்டன.

அனைத்து கட்சிகளுடனும், தூதுவர்களுடனும் கலந்துரையாடி அதனை இல்லாது செய்தோம்.

பின்னர்தான், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை நாம் தயாரித்தோம். இந்த சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுக்க முடியாமல் உள்ளது.

எனவே, எந்த தரப்பையும் பாதிக்காத வகையில்தான் நாம் இந்த விடயத்தில் செயற்படுவோம். ஜனவரி, பெப்ரவரியில் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஆண்டில் மீண்டும் புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீதி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு.  எதிர்வரும் ஆண்டின் ஆரம்பத்தில் மீண்டும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான புதிய சட்டமொன்றை கொண்டுவர எதிர்பார்த்திருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில்  உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி, மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையிலான சட்டமொன்றை கொண்டுவர 2018 ஆம் ஆண்டில் கொள்கை ரீதியாக நாம் தீர்மானித்தோம்.நாடாளுமன்றிலும் இந்த சட்டமூலத்தை நாம் தாக்கல் செய்திருந்தோம். இது உயர்நீதிமன்றினால் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது.இறுதியாக இதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டபோதுதான், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றது.இதனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் மனநிலையும் மாற்றமடைந்து, நாட்டில் குழப்பமானதொரு சூழல் நிலவியது.தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் கீழ், சட்டமூலமொன்றை சமர்ப்பித்திருந்தோம். இது சற்று கடுமையான சரத்துக்களை கொண்டிப்பதாக எதிர்ப்புக்களும் வெளியிடப்பட்டன.அனைத்து கட்சிகளுடனும், தூதுவர்களுடனும் கலந்துரையாடி அதனை இல்லாது செய்தோம்.பின்னர்தான், தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை நாம் தயாரித்தோம். இந்த சட்டமூலத்தை விவாதத்திற்கு எடுக்க முடியாமல் உள்ளது.எனவே, எந்த தரப்பையும் பாதிக்காத வகையில்தான் நாம் இந்த விடயத்தில் செயற்படுவோம். ஜனவரி, பெப்ரவரியில் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement