• May 20 2024

இஸ்ரேல் செல்லும் விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கு புதிய இணையதளம்...! பணிப்பெண்கள் தொடர்பிலும் விசேட கவனம்...!அமைச்சர் மனுஷ தெரிவிப்பு...!

Sharmi / May 9th 2024, 4:56 pm
image

Advertisement

இஸ்ரேலுக்கு  செல்லும் பணிப்பெண்கள் தொடர்பிலும் விவசாயிகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

இன்றைய(09) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது  தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

2022 ஆம் ஆண்டு 2000 இற்கும் அதிகமானோர் இஸ்ரேலுக்கு பணிப்பெண்களாக அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்கள் NVQ சான்றிதழை பெற்றவர்களாக சென்றதன் பின்னர் அவர்கள் ஆதுலர் சேவைகளை அவர்கள்  வைத்தியசாலைகளிலே இணைக்கப்பட்டுள்ளார்கள்.

 NVQ  சான்றிதழ்களை பெற்றதன் பின்னர் அவர்களினுடைய பட்டியல் இணையதளங்களில் வெளியிடப்பட்டது.

அது தொடர்பாக இஸ்ரேல் அரசாங்கத்தில் அவர்கள் கோரியதன் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

அது தொடர்பில் புதியவர்களினை உள்ளடக்குவதற்கும், பெண்களை உள்ளடக்குவதற்கும், 40 வயதுக்கு உட்பட்டோரை உள்வாங்கும் சந்தர்ப்பம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இஸ்ரேல் செல்லும் விவசாய துறை சார்ந்தவர்களுக்கு இணையதளம் ஒன்று திறக்கப்பட்டு அவர்களினுடைய தகவல் பெற எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலே பிரதேச காரியாலயங்களினூடாக தகவல்களை பெற்றுக்கொண்டு அதனை இஸ்ரேலுக்கு அனுப்பி அதனூடாக தெரிவுகளை மேற்கொண்டு 1200 பேர்,  5000 பேர், 4000 பேர் என்ற அடிப்படையில் லொத்தர் மூலமாக, கூப்பன் தெரிவு மூலமாக அவர்கள் தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள்.

பொருத்தமானவர்கள் தவிர்ந்த 1200 பேரினை நாங்கள் ஏற்கனவே நாங்கள் அனுப்பியிருக்கின்றோம். 200 இருக்கும் அதிகமானோர் விவசாய துறைக்காக சென்றிருக்கிறார்கள். மிகுதியாக உள்ளவர்கள் அபிவிருத்தி பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 

மூன்றாவது குழுவினர் தொடர்பாக sms தகவல் அனுப்பியிருக்கின்றோம்.  அவர்களினுடைய வைத்திய சோதனைக்காக எதிர்பார்த்துள்ளோம்  என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் செல்லும் விவசாயத்துறை சார்ந்தவர்களுக்கு புதிய இணையதளம். பணிப்பெண்கள் தொடர்பிலும் விசேட கவனம்.அமைச்சர் மனுஷ தெரிவிப்பு. இஸ்ரேலுக்கு  செல்லும் பணிப்பெண்கள் தொடர்பிலும் விவசாயிகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்றைய(09) பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது  தொடர்பில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,2022 ஆம் ஆண்டு 2000 இற்கும் அதிகமானோர் இஸ்ரேலுக்கு பணிப்பெண்களாக அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்கள் NVQ சான்றிதழை பெற்றவர்களாக சென்றதன் பின்னர் அவர்கள் ஆதுலர் சேவைகளை அவர்கள்  வைத்தியசாலைகளிலே இணைக்கப்பட்டுள்ளார்கள். NVQ  சான்றிதழ்களை பெற்றதன் பின்னர் அவர்களினுடைய பட்டியல் இணையதளங்களில் வெளியிடப்பட்டது. அது தொடர்பாக இஸ்ரேல் அரசாங்கத்தில் அவர்கள் கோரியதன் அடிப்படையில் இணைக்கப்பட்டுள்ளார்கள். அது தொடர்பில் புதியவர்களினை உள்ளடக்குவதற்கும், பெண்களை உள்ளடக்குவதற்கும், 40 வயதுக்கு உட்பட்டோரை உள்வாங்கும் சந்தர்ப்பம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.அத்துடன் இஸ்ரேல் செல்லும் விவசாய துறை சார்ந்தவர்களுக்கு இணையதளம் ஒன்று திறக்கப்பட்டு அவர்களினுடைய தகவல் பெற எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திலே பிரதேச காரியாலயங்களினூடாக தகவல்களை பெற்றுக்கொண்டு அதனை இஸ்ரேலுக்கு அனுப்பி அதனூடாக தெரிவுகளை மேற்கொண்டு 1200 பேர்,  5000 பேர், 4000 பேர் என்ற அடிப்படையில் லொத்தர் மூலமாக, கூப்பன் தெரிவு மூலமாக அவர்கள் தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள். பொருத்தமானவர்கள் தவிர்ந்த 1200 பேரினை நாங்கள் ஏற்கனவே நாங்கள் அனுப்பியிருக்கின்றோம். 200 இருக்கும் அதிகமானோர் விவசாய துறைக்காக சென்றிருக்கிறார்கள். மிகுதியாக உள்ளவர்கள் அபிவிருத்தி பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்கள். மூன்றாவது குழுவினர் தொடர்பாக sms தகவல் அனுப்பியிருக்கின்றோம்.  அவர்களினுடைய வைத்திய சோதனைக்காக எதிர்பார்த்துள்ளோம்  என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement