ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரை புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர்.
குறித்த அமைர்வு இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் வைபவரீதியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அமர்வு ஆரம்பிக்கப்படும் போது எதிர்க்கட்சி ஆசனங்கள் வெறுமனே காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.