• May 17 2024

வவுனியாவில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு...! ஜெனிற்றாவிற்கு விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு...!samugammedia

Sharmi / Jan 8th 2024, 12:10 pm
image

Advertisement

வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை தொடர்ந்தும் அவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியாவிற்கு கடந்த 5 ஆம் திகதி அன்று காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு அன்றையதினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்பட்ட போராட்டகாரர்களை தடுத்து நிறுத்திய பொலிசார்,  ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிசாருக்கும் போராட்டக்கார்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை , பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை , அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னினைப்படுத்த போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை  8ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் போராட்டத்தினை காணோளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கி வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்த நிலையில்,

 இன்றையதினம்(08) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை நீதிமன்றில் ஆயர்படுத்திய சமயத்தில் அவரை கைது நடவடிக்கையின் போது இரு பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையினால் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டிலும் நீதிமன்ற உத்தரவினை மீறிய குற்றச்சாட்டிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


வவுனியாவில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு. ஜெனிற்றாவிற்கு விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு.samugammedia வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை தொடர்ந்தும் அவரை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியாவிற்கு கடந்த 5 ஆம் திகதி அன்று காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவுக்கு அன்றையதினம் போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்பட்ட போராட்டகாரர்களை தடுத்து நிறுத்திய பொலிசார்,  ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர். இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.இதனையடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை , பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை , அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முன்னினைப்படுத்த போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை  8ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் போராட்டத்தினை காணோளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கி வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்றையதினம்(08) விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை நீதிமன்றில் ஆயர்படுத்திய சமயத்தில் அவரை கைது நடவடிக்கையின் போது இரு பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமையினால் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டிலும் நீதிமன்ற உத்தரவினை மீறிய குற்றச்சாட்டிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி.ஜெனிற்றாவை எதிர்வரும் 12ம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement