கிளிநொச்சி - கோணாவில் வயல் பகுதிகளில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் அறுவடை விழா இன்று (11) இடம்பெற்றது.
காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய நாற்று நடும் இயந்திரம் மூலம் AT362 நெல் வர்க்கம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.
விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்
இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்பட்டது.
நெல் அறுவடை நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன ,வடமாகாண விவசாய மேலதிக பணிப்பாளர் த.யோகேஸ்வரன், காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் வடமாகாண பணிப்பாளர் A.C.பாபு,யாழ் பல்கலைக்கழக விவசாய பீட பண்ணை முகாமையாளர், ,விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ,காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் உத்தியோகத்தர்கள் ,விவசாய அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி கோணாவிலில் நெல் அறுவடை விழா கிளிநொச்சி - கோணாவில் வயல் பகுதிகளில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட நெல் அறுவடை விழா இன்று (11) இடம்பெற்றது. காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன் மாவட்ட விவசாயத்திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய நாற்று நடும் இயந்திரம் மூலம் AT362 நெல் வர்க்கம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகள் மத்தியில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை வழங்கி நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில்இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்யப்பட்டது. நெல் அறுவடை நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் வி.சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் பணிப்பாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன ,வடமாகாண விவசாய மேலதிக பணிப்பாளர் த.யோகேஸ்வரன், காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் வடமாகாண பணிப்பாளர் A.C.பாபு,யாழ் பல்கலைக்கழக விவசாய பீட பண்ணை முகாமையாளர், ,விவசாயத்திணைக்கள உத்தியோகத்தர்கள் ,காலநிலைக்கு சீரமைவான விவசாயத்திட்டத்தின் உத்தியோகத்தர்கள் ,விவசாய அமைப்பு பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.