• Sep 08 2024

ஒரு ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் பறந்ததால் பதற்றம் - அதிர்ச்சியில் பயணிகள்

Tharun / Jun 9th 2024, 4:32 pm
image

Advertisement

ஒரே ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் பறப்பை மேற்கொண்டதால் பயணிகளிடையே பெரும் பதற்றம் உருவானது.இந்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய 27வது ஓடுபாதையில் நேற்று(08) நடைபெற்றது.

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானமும் அதேசமயம் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்திலிருந்து வந்த இண்டிகோ விமானமும் ஒரே ஓடுதளத்தில் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தில் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை. இந்த காணொளி வைரலால் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை மும்பை விமான நிலையத்தில் ஒரே ஓடுதளத்தில் ஒரே நேரத்தில் 2 விமானங்கள இயக்கப்பட்ட விவகாரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளது.


ஒரு ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் பறந்ததால் பதற்றம் - அதிர்ச்சியில் பயணிகள் ஒரே ஓடு பாதையில் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் பறப்பை மேற்கொண்டதால் பயணிகளிடையே பெரும் பதற்றம் உருவானது.இந்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த சம்பவம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலைய 27வது ஓடுபாதையில் நேற்று(08) நடைபெற்றது.திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானமும் அதேசமயம் தேவி அஹில்யாபாய் ஹோல்கர் விமான நிலையத்திலிருந்து வந்த இண்டிகோ விமானமும் ஒரே ஓடுதளத்தில் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவத்தில் எந்தவித விபத்தும் ஏற்படவில்லை. இந்த காணொளி வைரலால் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.இதேவேளை மும்பை விமான நிலையத்தில் ஒரே ஓடுதளத்தில் ஒரே நேரத்தில் 2 விமானங்கள இயக்கப்பட்ட விவகாரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.மேலும் இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குநகரம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement