• Feb 05 2025

பொலிஸ் ஜீப் மோதி பாதசாரி படுகாயம் - பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

Tamil nila / Dec 8th 2024, 9:13 pm
image

மட்டக்களப்பு, செங்கலடியில் கரடியனாறு பகுதியில் பொலிஸ் ஜீப் வாகனம்   மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.  

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

விபத்தையடுத்து பொலிஸ் ஜீப் வாகனத்தின் சாரதியான கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கரடியனாறு போக்குவரத்துப்  பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸ் ஜீப் மோதி பாதசாரி படுகாயம் - பொலிஸ் பொறுப்பதிகாரி கைது மட்டக்களப்பு, செங்கலடியில் கரடியனாறு பகுதியில் பொலிஸ் ஜீப் வாகனம்   மோதியதில் பாதசாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.  விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.விபத்தையடுத்து பொலிஸ் ஜீப் வாகனத்தின் சாரதியான கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கரடியனாறு போக்குவரத்துப்  பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement