• Mar 20 2025

தேசிய மக்கள் சக்தியினர் மீது மக்களுக்கு அதிருப்தி: தொடரும் பழிவாங்கல் செயற்பாடுகள்- அப்துல்லா மஹ்ரூப் சுட்டிக்காட்டு..!

Sharmi / Mar 18th 2025, 9:55 am
image

ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஊழல் என்கின்ற போர்வையில் கடந்த கால அரசாங்க தலைவர்களை பழிவாங்க நினைக்கிறார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை நேற்றையதினம்(17) மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள். மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்யாது இருப்பது மேலும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக முஸ்லீம் சமூகம் கடந்த காலங்களில் நாடு சுதந்திரமடைவதற்கு முன்பும் அதன் பின்பும் அமைச்சரவையில் ஆகக் கூடுதலாக ஏழு அமைச்சர்கள் இருந்துள்ளார்கள்.

ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் 2000,2001,2004 ஆம் ஆண்டு மற்றும் 2015 தொடக்கம் 2019களில் ரணில் விக்ரமசிங்க காலத்தில் அமைச்சரவையில் இருந்துள்ளார்கள்.

இன்று பெரும்பான்மை சமூகத்துக்கு வாக்குகளை அளித்த முஸ்லீம் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.

அமைச்சரவையில் முஸ்லீம்கள் இல்லை. கிளீன் சிறீலங்கா திட்டத்தில் 18 பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்ற போதிலும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் எவரும் இல்லை.

தற்போது முஸ்லீம்களின் ஷரீஆ பர்தா விவகாரங்களில் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் உட்பட பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களும் புரியாதபடி பேசுகிறார்கள் மற்றும் கல்முனையில் பயங்கரவாத அடிப்படை வாத கொள்கை என்கின்ற விடயங்கள் முஸ்லீம் சமூகத்தை மாத்திரமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 

இந்த தேர்தல் ஜனாதிபதியை அல்லது பிரதமரை ,பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தேர்தல் அல்ல முஸ்லீம் சமூகத்தை மாற்றியமைக்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது.

மூதூர் தொகுதியில் கடந்த தேர்தலின் போது 56000 வாக்குகளை வழங்கியுள்ளது. இதற்காக இந்த தொகுதிக்கு தேசிய பட்டியலை முஸ்லீம் சமூகத்துக்கு அரசாங்கம் வழங்கியிருக்க வேண்டும்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் முஸ்லீம் தலைமைகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்களின் வாக்குகள் குறைந்து தோல்வி நிலையில் வெற்றியீட்டியுள்ளார்கள்.

இதனை வைத்து முஸ்லீம் சமூகம் நல்லதொரு பாடத்தை கற்றுள்ளது.

எனவே தேசிய மக்கள் சக்திக்கு விழிப்புணர்வுள்ள தேர்தலாக இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதுடன் ஐக்கிய தேசிய கட்சி இம் முறை திருமலை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை கைப்பற்றும் எனவும் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியினர் மீது மக்களுக்கு அதிருப்தி: தொடரும் பழிவாங்கல் செயற்பாடுகள்- அப்துல்லா மஹ்ரூப் சுட்டிக்காட்டு. ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது ஊழல் என்கின்ற போர்வையில் கடந்த கால அரசாங்க தலைவர்களை பழிவாங்க நினைக்கிறார்கள் என ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர் தொகுதிக்கான அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணத்தை நேற்றையதினம்(17) மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள். மக்கள் எதிர்பார்த்த விடயங்களை செய்யாது இருப்பது மேலும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக முஸ்லீம் சமூகம் கடந்த காலங்களில் நாடு சுதந்திரமடைவதற்கு முன்பும் அதன் பின்பும் அமைச்சரவையில் ஆகக் கூடுதலாக ஏழு அமைச்சர்கள் இருந்துள்ளார்கள்.ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் 2000,2001,2004 ஆம் ஆண்டு மற்றும் 2015 தொடக்கம் 2019களில் ரணில் விக்ரமசிங்க காலத்தில் அமைச்சரவையில் இருந்துள்ளார்கள்.இன்று பெரும்பான்மை சமூகத்துக்கு வாக்குகளை அளித்த முஸ்லீம் சமூகம் ஏமாற்றப்பட்டுள்ளது.அமைச்சரவையில் முஸ்லீம்கள் இல்லை. கிளீன் சிறீலங்கா திட்டத்தில் 18 பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் இருக்கின்ற போதிலும் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்தவர்கள் எவரும் இல்லை.தற்போது முஸ்லீம்களின் ஷரீஆ பர்தா விவகாரங்களில் அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் உட்பட பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த அமைச்சர்களும் புரியாதபடி பேசுகிறார்கள் மற்றும் கல்முனையில் பயங்கரவாத அடிப்படை வாத கொள்கை என்கின்ற விடயங்கள் முஸ்லீம் சமூகத்தை மாத்திரமல்ல ஒட்டுமொத்த சமூகத்தையும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த தேர்தல் ஜனாதிபதியை அல்லது பிரதமரை ,பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான தேர்தல் அல்ல முஸ்லீம் சமூகத்தை மாற்றியமைக்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது.மூதூர் தொகுதியில் கடந்த தேர்தலின் போது 56000 வாக்குகளை வழங்கியுள்ளது. இதற்காக இந்த தொகுதிக்கு தேசிய பட்டியலை முஸ்லீம் சமூகத்துக்கு அரசாங்கம் வழங்கியிருக்க வேண்டும்.நடைபெற்று முடிந்த தேர்தலில் முஸ்லீம் தலைமைகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்களின் வாக்குகள் குறைந்து தோல்வி நிலையில் வெற்றியீட்டியுள்ளார்கள்.இதனை வைத்து முஸ்லீம் சமூகம் நல்லதொரு பாடத்தை கற்றுள்ளது.எனவே தேசிய மக்கள் சக்திக்கு விழிப்புணர்வுள்ள தேர்தலாக இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதுடன் ஐக்கிய தேசிய கட்சி இம் முறை திருமலை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை கைப்பற்றும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement