மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இன்றும் (13) மின் விநியோகத் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (13) மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை 04 பிரிவுகளின் கீழ் வெவ்வேறு பிரதேசங்களில் ஒரு மணி நேர மின்வெட்டு விதிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் எதிர்காலத்தில் மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (13) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
இன்று (13) இது தொடர்பான தீர்மானத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய (Tilak Siyambalapitiya) குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் மின்சாரத் தேவையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த பணிகளை விரைவாக முடித்த பின்னர், மின்பிறப்பாக்கிகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் பெரும்பாலும் நாளை (14) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மின் துண்டிப்பு நேர அட்டவணை வௌியீடு மின் விநியோகத் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் பகுதிகள் மற்றும் நேர அட்டவணையை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இன்றும் (13) மின் விநியோகத் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இந்த மின் விநியோகத் துண்டிப்பு ஒரு மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அதன்படி இன்று (13) மாலை 5.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை 04 பிரிவுகளின் கீழ் வெவ்வேறு பிரதேசங்களில் ஒரு மணி நேர மின்வெட்டு விதிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.நாட்டில் எதிர்காலத்தில் மின் விநியோகத் துண்டிப்பு தொடருமா இல்லையா என்பது தொடர்பில் இன்று (13) தீர்மானிக்கப்படும் என இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. இன்று (13) இது தொடர்பான தீர்மானத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய (Tilak Siyambalapitiya) குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் நிலையத்தில் உள்ள 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால் மின்சாரத் தேவையை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.தற்போது, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ள நிலையில், அதன் பராமரிப்புப் பணிகள் மின் பொறியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறித்த பணிகளை விரைவாக முடித்த பின்னர், மின்பிறப்பாக்கிகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன் பெரும்பாலும் நாளை (14) நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம், தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.