• Jun 06 2025

கிரீஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

Sharmi / Jun 3rd 2025, 10:01 am
image

கிரீஸின் டோடெக்கானீஸ் தீவுகள் பகுதியில்  6.2 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்றையதினம்(03)  அதிகாலை பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், துருக்கிய எல்லைக்கு அருகில் இந்த நில அதிர்வு நிகழ்வு நிகழ்ந்தது.

இதற்கிடையில், இன்றையதினம் அதிகாலை மத்திய தரைக் கடலோர நகரமான மர்மாரிஸை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் போது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முயன்ற ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கம் கிரீஸின் ரோட்ஸ் தீவு உட்பட தெற்கு கிரீஸ், மேற்கு துருக்கி மற்றும் அருகிலுள்ள ஏஜியன் கடல் கரையோரப் பகுதிகளில் உணரப்பட்டது. 

இந்நிலையில் தற்போது வரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது பெரிய அளவிலான சேதங்கள் குறித்து உடனடி அறிக்கைகள் இல்லை என்றாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அவசரகால பதில் குழுக்கள் எச்சரிக்கையுடன் காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கிரீஸை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம். கிரீஸின் டோடெக்கானீஸ் தீவுகள் பகுதியில்  6.2 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்றையதினம்(03)  அதிகாலை பதிவாகியுள்ளது.ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், துருக்கிய எல்லைக்கு அருகில் இந்த நில அதிர்வு நிகழ்வு நிகழ்ந்தது.இதற்கிடையில், இன்றையதினம் அதிகாலை மத்திய தரைக் கடலோர நகரமான மர்மாரிஸை 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியதாக துருக்கியின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தின் போது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முயன்ற ஏழு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.நிலநடுக்கம் கிரீஸின் ரோட்ஸ் தீவு உட்பட தெற்கு கிரீஸ், மேற்கு துருக்கி மற்றும் அருகிலுள்ள ஏஜியன் கடல் கரையோரப் பகுதிகளில் உணரப்பட்டது. இந்நிலையில் தற்போது வரை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு அல்லது பெரிய அளவிலான சேதங்கள் குறித்து உடனடி அறிக்கைகள் இல்லை என்றாலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அவசரகால பதில் குழுக்கள் எச்சரிக்கையுடன் காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement