உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டங்களில் பங்குப்பற்றாமலிருக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி என்ற பொதுவான பதவியில் இருந்து கொண்டு தேர்தல் பிரச்சார மேடையேறுவது பொறுத்தமற்றது என்பதை ஜனாதிபதி, ஆளும் தரப்பின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னர் அனைத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் பொது மக்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் நடத்தப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளாமலிருக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களில் பங்கேற்காதிருக்க ஜனாதிபதி முடிவு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் பிரசார கூட்டங்களில் பங்குப்பற்றாமலிருக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதி என்ற பொதுவான பதவியில் இருந்து கொண்டு தேர்தல் பிரச்சார மேடையேறுவது பொறுத்தமற்றது என்பதை ஜனாதிபதி, ஆளும் தரப்பின் உறுப்பினர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னர் அனைத்து மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்து கொள்ளவுள்ளார்.அத்துடன் மாவட்ட மட்டத்தில் நடத்தப்படும் பொது மக்கள் கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ளார்.உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் நடத்தப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.இவ்வாறான நிலையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளாமலிருக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.