நிதி மோசடியில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் வங்கி மேலாளர் டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு வெசாக் தினத்தில் ஜனததிபதி அநுரகுமார திசாநாயக்க மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா சாடியுள்ளார்.
திலகரத்ன பல வழக்குகளை எதிர்கொள்வதால், மன்னிப்பு வழங்குவதில் பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் மற்றும் நடைமுறைகள் எவை என்பது தொடர்பில் எம்.பி. பெரேரா நாடாளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மே மாத தொடக்கத்தில் அனுராதபுர உயர் நீதிமன்றத்தால் ரூ.4 மில்லியன் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட சந்தேக நபருக்கு, தண்டனை விதிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, வெசாக் போயா தினத்தன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மன்னிப்பு வழங்கினார்.
எனினும் ஊடக அறிக்கைகளின்படி, திலகரத்ன பல வழக்குகளை எதிர்கொள்கிறார். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் அமர்வின் போது அரசாங்கத்தால் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. - என்றார்.
இதற்கிடையில் பல செய்தித்தாள்கள் இந்த வழக்கை முன்னிலைப்படுத்தி, ஒரு கடுமையான நிதி குற்றவாளிக்கு ஏன் மத விழாக்களின் போது ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெசாக் தினத்தில் நிதி மோசடிக் குற்றவாளிக்கு ஜனாதிபதி மன்னிப்பு. - அஜித் பெரேரா எம்.பி சாடல். நிதி மோசடியில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் வங்கி மேலாளர் டபிள்யூ.எம். அதுல திலகரத்னவுக்கு வெசாக் தினத்தில் ஜனததிபதி அநுரகுமார திசாநாயக்க மன்னிப்பு வழங்கியுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா சாடியுள்ளார். திலகரத்ன பல வழக்குகளை எதிர்கொள்வதால், மன்னிப்பு வழங்குவதில் பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் மற்றும் நடைமுறைகள் எவை என்பது தொடர்பில் எம்.பி. பெரேரா நாடாளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்பினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மே மாத தொடக்கத்தில் அனுராதபுர உயர் நீதிமன்றத்தால் ரூ.4 மில்லியன் தவறாகப் பயன்படுத்தியதாக குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட சந்தேக நபருக்கு, தண்டனை விதிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, வெசாக் போயா தினத்தன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மன்னிப்பு வழங்கினார்.எனினும் ஊடக அறிக்கைகளின்படி, திலகரத்ன பல வழக்குகளை எதிர்கொள்கிறார். வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் அமர்வின் போது அரசாங்கத்தால் எந்த பதிலும் வழங்கப்படவில்லை. - என்றார். இதற்கிடையில் பல செய்தித்தாள்கள் இந்த வழக்கை முன்னிலைப்படுத்தி, ஒரு கடுமையான நிதி குற்றவாளிக்கு ஏன் மத விழாக்களின் போது ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.