• Sep 17 2024

நிலவும் சீரற்ற காலநிலை..! நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு..!

Sharmi / Aug 20th 2024, 3:38 pm
image

Advertisement

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன்  சில பிரதேங்களில் மண்சரிவு அபாயம் காரணமாக சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் ,

களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளது.

குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் மேலும் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்தார்.

இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் இன்று (20) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


நிலவும் சீரற்ற காலநிலை. நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன்  சில பிரதேங்களில் மண்சரிவு அபாயம் காரணமாக சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறானதொரு சூழ்நிலையில் ,களுத்துறை மாவட்டத்தின் மதுராவல, பாலிந்தநுவர, மில்லனிய மற்றும் புலத்சிங்கள பிரதேசங்களில் பல வீதிகள் இன்னும் நீரில் மூழ்கியுள்ளது.குக்குலே கங்கை மற்றும் தெதுரு ஓயா நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் மேலும் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் தெரிவித்தார்.இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில பிரதேசங்களில் இன்று (20) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement