மாணவர் போராட்டத்தால் ஆட்சி அதிகாரத்தை இழந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்து இரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், "எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் பங்களாதேஷ் திரும்புவதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சபதம் எடுத்துள்ளார்.
புதுடெல்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கூட்டமைப்பில் தொலைபேசி வழியாகப் உரையாற்றிய 78 வயதான ஷேக் ஹசீனா, கைது நடவடிக்கை அல்லது மரண தண்டனைக்குத் தான் அஞ்சப்போவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் ஹசீனா பகிர்ந்த முக்கிய தகவல்கள்:
"நான் கைது செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் அல்லது ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்படலாம். ஆனால், என் மக்களுக்காக ஆற்ற வேண்டிய கடமையை இந்த பயம் ஒருபோதும் தீர்மானிக்காது," எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹசீனாவை உடனடியாகத் தங்களிடம் ஒப்படைக்குமாறு பங்களாதேஷ் அரசு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், புதுடெல்லி இக்கோரிக்கையைத் தொடர்ந்து பரிசீலனையில் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
"சிறை அல்லது மரணம். எதற்கும் தயார்" – ஷேக் ஹசீனா சூளுரை மாணவர் போராட்டத்தால் ஆட்சி அதிகாரத்தை இழந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்து இரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், "எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் பங்களாதேஷ் திரும்புவதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா சபதம் எடுத்துள்ளார்.புதுடெல்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டுச் செய்தியாளர்கள் கூட்டமைப்பில் தொலைபேசி வழியாகப் உரையாற்றிய 78 வயதான ஷேக் ஹசீனா, கைது நடவடிக்கை அல்லது மரண தண்டனைக்குத் தான் அஞ்சப்போவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.செய்தியாளர் சந்திப்பில் ஹசீனா பகிர்ந்த முக்கிய தகவல்கள்:"நான் கைது செய்யப்படலாம், சிறையில் அடைக்கப்படலாம் அல்லது ஜோடிக்கப்பட்ட வழக்குகளில் தண்டிக்கப்படலாம். ஆனால், என் மக்களுக்காக ஆற்ற வேண்டிய கடமையை இந்த பயம் ஒருபோதும் தீர்மானிக்காது," எனத் தெரிவித்துள்ளார்.கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது 1,400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மனிதநேயத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி பங்களாதேஷின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்தது.மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஹசீனாவை உடனடியாகத் தங்களிடம் ஒப்படைக்குமாறு பங்களாதேஷ் அரசு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், புதுடெல்லி இக்கோரிக்கையைத் தொடர்ந்து பரிசீலனையில் வைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.