• Jun 21 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சி - திருகோணமலை மாவட்டம் தேசிய மட்டத்துக்கு தெரிவு!

shanuja / Jun 20th 2025, 11:42 pm
image

மாற்றுத்திறனாளிகளுக்கான கலாச்சார நிகழ்ச்சியில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய மட்டத்துக்குத் தெரிவாகியுள்ளனர். 


சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட இசை நிகழ்ச்சி,  மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் .சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (20) நடைபெற்றது


முதற்கட்டமாக  கிழக்கு மாகாண மட்ட போட்டிகள் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில்  திருகோணமலை, மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக சேவைகள திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தலைப்புகளுக்கு அமைவாக போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர். 


இதில் திருகோணமலை மாவட்டம் முதலாம்  இடத்தைப்  பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இதற்கிடையே வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய மட்டத்துக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


நிகழ்வில் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன் கோமரண், கடவெல உத்தியோகத்தர் அ செல்வகுமார், குச்சவெளி உத்தியோகத்தர் ம. குகதாசன், பட்டிணமும் சூழலும் உத்தியோகத்தர் கௌரிதாஸ் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான நிகழ்ச்சி - திருகோணமலை மாவட்டம் தேசிய மட்டத்துக்கு தெரிவு மாற்றுத்திறனாளிகளுக்கான கலாச்சார நிகழ்ச்சியில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய மட்டத்துக்குத் தெரிவாகியுள்ளனர். சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட இசை நிகழ்ச்சி,  மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் .சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (20) நடைபெற்றதுமுதற்கட்டமாக  கிழக்கு மாகாண மட்ட போட்டிகள் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில்  திருகோணமலை, மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக சேவைகள திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தலைப்புகளுக்கு அமைவாக போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றினர். இதில் திருகோணமலை மாவட்டம் முதலாம்  இடத்தைப்  பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தெரிவாகியுள்ளது. இதற்கிடையே வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தேசிய மட்டத்துக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன் கோமரண், கடவெல உத்தியோகத்தர் அ செல்வகுமார், குச்சவெளி உத்தியோகத்தர் ம. குகதாசன், பட்டிணமும் சூழலும் உத்தியோகத்தர் கௌரிதாஸ் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தின் இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement