தெற்குப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் லொறியுடன் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியில் சென்ற லொறி ஒன்றை ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் வழிமறியல் சோதனையை மேற்கொண்டனர்.
இதன்போது சாரதியின் இருக்கைக்கு அருகில் உள்ள டேஷ்போர்டின் கீழ் C4 எனப்படும் வெடி மருந்துகள் கொண்ட பை மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகளின் நிறை 156.07 கிராம் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வெடி மருந்துகள் அதிக சக்தி வாய்ந்தவை என்றும், இதனைக் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிபொருட்கள் கந்தளாய் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட வெடிபொருட்கள் லொறியில் மீட்பு தெற்குப் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்ட வெடிபொருட்கள் லொறியுடன் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹபரணை - திருகோணமலை பிரதான வீதியில் சென்ற லொறி ஒன்றை ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் வழிமறியல் சோதனையை மேற்கொண்டனர். இதன்போது சாரதியின் இருக்கைக்கு அருகில் உள்ள டேஷ்போர்டின் கீழ் C4 எனப்படும் வெடி மருந்துகள் கொண்ட பை மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகளின் நிறை 156.07 கிராம் என பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வெடி மருந்துகள் அதிக சக்தி வாய்ந்தவை என்றும், இதனைக் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வெடிபொருட்கள் கந்தளாய் பகுதியிலிருந்து தெற்குப் பகுதிக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சந்தேகநபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஹதரஸ்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.