நாட்டில் நிலவி வரும் அரசி தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பது சுலபமான காரியம் அல்ல என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒரு கையொப்பத்தில் அரிசி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்திருந்தார்.
எனினும், அரசாங்கத்தை பொறுப்பு ஏற்றுக் கொண்டதன் பின்னர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது சவால் மிக்கது என தற்பொழுது குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரிசி வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு நீண்ட கால செயல்முறை எனவும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் நாட்டின் அரிசி விற்பனையை கட்டுப்படுத்தி வருவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் அரிசி மாஃபியாவைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
நாட்டில் அரிசி மாஃபியாவைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு நாட்டில் நிலவி வரும் அரசி தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பது சுலபமான காரியம் அல்ல என அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.முன்னதாக ஒரு கையொப்பத்தில் அரிசி பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்திருந்தார்.எனினும், அரசாங்கத்தை பொறுப்பு ஏற்றுக் கொண்டதன் பின்னர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பது சவால் மிக்கது என தற்பொழுது குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அரிசி வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தொடங்கியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது ஒரு நீண்ட கால செயல்முறை எனவும் சில அரிசி ஆலை உரிமையாளர்கள் நாட்டின் அரிசி விற்பனையை கட்டுப்படுத்தி வருவதாகவும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.நாட்டில் அரிசி மாஃபியாவைக் கட்டுப்படுத்த முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.