புத்தளம் மாநகர சபையின் புதிய மேயராக பொறியியலாளர் முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத்,
தனது கடமைகளை நேற்று (17) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புத்தளம் மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு நேற்றுமுன்தினம் (16) இடம்பெற்ற போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான பொறியியலாளர் முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத், மேயராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் தேர்வில் 10 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான நுஸ்கி நிசார், புத்தளம் மாநகர சபையின் முதல் பிரதி மேயராக தெரிவானார்.
இந்த நிலையில், புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியியலாளர் முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத், மற்றும் பிரதி மேயர் நுஸ்கி நிசார் ஆகியோர் புத்தளம் மாநகராட்சி ஆணையாளர் எம்.எம்.நந்தன மஹிபால முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
கடமைகளை பொறுப்பேற்றார் புத்தளம் மாநகரசபை மேயர் புத்தளம் மாநகர சபையின் புதிய மேயராக பொறியியலாளர் முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத்,தனது கடமைகளை நேற்று (17) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். புத்தளம் மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு நேற்றுமுன்தினம் (16) இடம்பெற்ற போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரான பொறியியலாளர் முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத், மேயராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.புத்தளம் மாநகர சபையின் பிரதி மேயர் தேர்வில் 10 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான நுஸ்கி நிசார், புத்தளம் மாநகர சபையின் முதல் பிரதி மேயராக தெரிவானார்.இந்த நிலையில், புத்தளம் மாநகர சபையின் முதலாவது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியியலாளர் முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத், மற்றும் பிரதி மேயர் நுஸ்கி நிசார் ஆகியோர் புத்தளம் மாநகராட்சி ஆணையாளர் எம்.எம்.நந்தன மஹிபால முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.