• Jun 08 2025

வடக்கு மாகாணத்தில் 16 ஆம் திகதி வரை மழை! பகலில் கடும் வெப்பம்! பொதுமக்களுக்கான அறிவித்தல்

Chithra / Jun 8th 2025, 4:17 pm
image


வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 10 நாட்களுக்கு பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். 

இந்த விடயம் குறித்து அவரது முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடுகையில், 

காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. 

நண்பகல் வரை மிகவும் வெப்பமான வானிலை நிலவும். ஆனால் பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

நண்பகல் வரையான கடும் வெப்பத்தினால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும் மாலை நேரத்தில் மழை கிடைப்பதால் வெப்பம் தணியலாம் என எதிர்பார்க்கின்றனர்.

வடக்கு மாகாணத்தில் 16 ஆம் திகதி வரை மழை பகலில் கடும் வெப்பம் பொதுமக்களுக்கான அறிவித்தல் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு எதிர்வரும் 10 நாட்களுக்கு பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியற்றுறைத் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து அவரது முகப்புத்தகத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடுகையில், காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு பிற்பகலில் அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நண்பகல் வரை மிகவும் வெப்பமான வானிலை நிலவும். ஆனால் பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நண்பகல் வரையான கடும் வெப்பத்தினால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும் மாலை நேரத்தில் மழை கிடைப்பதால் வெப்பம் தணியலாம் என எதிர்பார்க்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement